மிகவும் கவலைக்கிடமான நிலையில் தமிழ் பட நடிகை..!! ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் செலவு..!! சகோதரி அதிர்ச்சி தகவல்..!!

கேரளாவை சேர்ந்த மலையாள நடிகை அருந்ததி நாயர், தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ‘பொங்கி எழு மனோகரா’ என்கிற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான இவர், நடிகர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘சைத்தான்’ படத்தில் நடித்திருந்தார். தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வரும் அருந்ததி நாயர், கடந்த மாதம், தன்னுடைய சகோதரருடன் கோவளம் பைபாஸ் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர் மீது மோதி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து மறைந்தது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அருந்ததி நாயர், ஒரு மணி நேரத்திற்கு மேல் பேச்சு மூச்சு இல்லாமல் சாலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருந்ததி மற்றும் அவருடைய சகோதரரை மீட்டு, அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். கடந்த 20 நாட்களுக்கு மேலாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அருந்ததி நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மூச்சு விடுவதால் சிரமம் ஏற்பட்டதால், வென்டிலேட்டர் உதவியுடன் இவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ரத்தம் உறைந்ததால், இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

தற்போது இவருடைய நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், அருந்ததியின் சிகிச்சைக்கு ஒரு நாளைக்கு மட்டும் 2 லட்சம் வீதம் செலவாகிறது. இதுவரை சுமார் 40 லட்சத்திற்கு மேல் செலவாகி உள்ளதாக அருந்ததியின் சகோதரி ஆர்த்தி என்பவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அருந்ததி நாயரின் அம்மா, தன்னுடைய மகள் அருந்ததியின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் தவித்து வருவதாகவும், எந்த பிரபலங்களும் உதவ முன் வரவில்லை என கூறியிருந்தார். அருந்ததியின் சகோதரர் தற்போது விபத்தின் தாக்கத்தில் இருந்து மீண்டு குணமடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : BREAKING | தமிழ்நாட்டில் 8,050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை..!! மதுரை தான் டாப்..!! சத்யபிரதா சாஹூ அறிவிப்பு..!!

Chella

Next Post

Ajith | விடாமுயற்சி படப்பிடிப்பில் விபத்து..!! உயிர் தப்பிய நடிகர் அஜித்..!! பதறவைக்கும் வீடியோ..!!

Thu Apr 4 , 2024
நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. நீண்ட காலமாக இப்படத்தை எடுத்து வருகின்றனர். இப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தொடர் பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. மேலும், படப்பிடிப்பில் தாமதம் ஆகி வருவதால், ரசிகர்கள் கடும் அப்செட்டில் உள்ளனர். இந்நிலையில், விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கின் போது அஜித் குமாருக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

You May Like