ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள்…! மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்…!

MK Stalin dmk 6

ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்புவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


இது குறித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில்; மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழலினால் ஏற்பட்டுள்ள சவால்கள் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 498 மீனவர்கள், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 78 மீனவர்கள், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 72 மீனவர்கள், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் என மொத்தம் 651 இந்திய மீனவர்கள் ஈரானில் சிக்கித் தவித்து வருகின்றனர். அங்கு அதிகரித்து வரும் போர்ச் சூழல் காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொண்டு தமிழகத்துக்கு திரும்ப முடியாமல் இருந்து வருகின்றனர்.

மீனவர்களின் பாதுகாப்பு குறித்து தகவல்கள் ஏதும் இல்லாத காரணத்தால் தாயகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். எனவே ஈரானில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் சிக்கியுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்ப, மத்திய வெளியுறவு அமைச்சகம் தேவையான தூதரக நடவடிக்கைகளை எடுத்து உதவ வேண்டும். இது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் மிகுந்த ஆறுதலைத் தரும் என தெரிவித்துள்ளார்.

Read more: விளையாட்டு வீரர்களுக்கு சல்யூட்!. இன்று சர்வதேச ஒலிம்பிக் தினம்!. பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள்!.

Vignesh

Next Post

இனி தங்கம் விலை 30% வரை குறையும்.. போர் பதற்றத்திற்கு மத்தியில் நிபுணர்கள் சொன்ன குட்நியூஸ்..

Wed Jun 25 , 2025
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், ரஷ்யா – உக்ரைன் மோதல், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது.. இந்த ஆண்டு […]
Firefly indian family purchasing gold ornaments in jewellry with 16 9 ratio with night glit 766387 1

You May Like