தமிழகமே‌..! நாளை நடைபெறும் கிராம சபை கூட்டம்…! இதை எல்லாம் மக்கள் விவாதிக்க வேண்டும்…!

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும்‌ ஊராட்சிகள்‌ ஆணையர்‌ அவர்களது அறிவுரைகள்படி தமிழகம் முழுவதும் கிராம ஊராட்சிகளில்‌ தொழிலாளர்‌ தின கிராம சபைக்கூட்டம்‌ 01.05.2023 அன்று காலை 11.00 மணி முதல்‌ நடத்தப்படவுள்ளது.


அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள்‌ மற்றும்‌ ஊராட்சி செயலாளர்கள்‌ மேற்படி நாளில்‌ கிராம சபை கூட்டம்‌ நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும்‌ செய்ய வேண்டும். கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கும்‌ ஒரு பற்றாளரும்‌, கிராம சபை கூட்டம்‌ நடப்பதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும்‌ உதவி இயக்குநர்‌ நிலையிலும்‌, இணை இயக்குநர்‌ நிலையிலும்‌ ஒருங்கிணைப்பாளர்கள்‌ நியமனம் செய்யப்பட்டனர்.

எனவே, இந்த கிராம சபை கூட்டத்தில்‌ அனைத்து துறை அலுவலர்களும்‌, அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினர்களும்‌, ஊராட்சியிலுள்ள வாக்காளர்கள்‌, பொதுமக்கள்‌, மகளிர்‌ சுய உதவி குழுவினர்‌ மற்றும்‌ மாற்றுத்‌ திறனாளிகள்‌ உட்பட அனைத்து தரப்பு மக்களும்‌ அதிக அளவில்‌ தவறாமல்‌ கலந்து கொள்ள வேண்டும்.

IMG 20230430 052615
IMG 20230430 052721

Vignesh

Next Post

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம்...! குழந்தைகள்‌ உயிருக்கு ஆபத்து விளைவிக்கும்...! இதை தவிர்க்க வேண்டும்...!

Sun Apr 30 , 2023
கோடை வெயில்‌ தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால்‌ பொதுமக்கள்‌ கவனமாக இருக்க வேண்டும். அதே போல தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட அரசு அறிவுறுத்தியுள்ளது. வெப்பம்‌ மற்றும்‌ வெப்ப அலை பாதிப்புகளை தடுக்க, செய்ய வேண்டியவை / வெயிலில்‌ இருந்து தற்காத்து கொள்ளும்‌ வழிமுறைகள்‌. உடலின்‌ நீர்ச்சத்து குறையாமல்‌ பராமரிக்கவும்‌, தேவையான அளவு தண்ணீர்‌ குடிக்க வேண்டும்‌. பயணத்தின்‌ போது குடிநீரை எடுத்துச்‌ செல்ல வேண்டும்‌. ஒ.ஆர்‌.எஸ்‌, எலுமிச்சை ஜூஸ்‌, […]
images 2023 04 30T054035.231

You May Like