காந்தி ஜெயந்தி அன்று கிராம சபைக் கூட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும்…! பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு…!

Tn Govt 2025

காந்தி ஜெயந்தி தினத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல், பள்ளி வளர்ச்சி, கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு குறித்து பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றை அனைத்து ஊராட்சிகளிலும் அக். 2-ம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், குழு உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம், கிராம பஞ்சாயத்தும், மக்களும் தங்கள் பள்ளிகள் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் தேவைகளை அறிந்து கொண்டு தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். இதுதவிர, பள்ளியில் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், கிராம பஞ்சாயத்துக் கல்விக் குழு மூலமாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். எஸ்எம்சி குழுக்கள் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

குட் நியூஸ்.‌..! 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை...!

Tue Sep 23 , 2025
1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் பயின்றவர்களுக்கு, 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான பணி நியமன ஆணைகளை வழங்கி, வாழ்த்தினார். தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் 5000 […]
mks 2025

You May Like