fbpx

அதிகரித்த வாகன ஏற்றுமதி…! வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிப்பு…!

2020-21 –ஆம் ஆண்டைவிட 2021-22-ஆம் நிதியாண்டில் வாகனங்கள் ஏற்றுமதி 35.9% அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2020-21-ம் நிதியாண்டில் மொத்தம் 41,34,047 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் நிதியாண்டில், 56,17,246 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது 35.9% உயர்வாகும். இதில் கார்களைப் பொறுத்தவரையில் 2020-21-ம் நிதியாண்டில் 4,04,394 என்ற எண்ணிக்கையில் ஏற்றுமதி செய்யப்பட்டன. 2021-22-ம் நிதியாண்டில், 5,27,875 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் கார்களின் ஏற்றுமதி 42.9% அதிகரித்த வணிக வாகனங்களின் ஏற்றுமதி 50,334-லிருந்து 92,297 ஆக அதிகரித்ததன் மூலம் 83.36% உயர்வை எட்டியுள்ளது.

இருசக்கர வாகனங்களின் ஏற்றுமதி முந்தைய நிதியாண்டில் 32,82,786ஆக இருந்தது. கடந்த நிதியாண்டில் இது 44,43,018 ஆக அதிகரித்தது. இது 35.3% உயர்வாகும். வணிக வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களின் ஏற்றுமதியும் கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது.

வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 31-03-2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ரூபாய் ஏற்றுமதி கடன் மீதான வட்டி சமன்படுத்தும் திட்டமும் 31-03-2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதித் திட்டத்திற்கான வர்த்தக உள்கட்டமைப்பு (TIES) மற்றும் சந்தை அணுகல் முன்முயற்சிகள் (MAI) திட்டம் போன்ற பல திட்டங்களின் மூலம் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் உதவி வழங்கப்படுகிறது.

Vignesh

Next Post

5 புதிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்...! மத்திய சட்ட அமைச்சர் அறிவிப்பு...!

Sun Feb 5 , 2023
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமன செயல்முறை தொடர்பாக அரசாங்கத்திற்கும் நீதித்துறைக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கான ஐந்து நீதிபதிகளின் பெயரை மத்திய அரசு சனிக்கிழமை அனுமதித்தது. உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவர்களின் பெயர்களை உயர் நீதிமன்றங்களில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்த டிசம்பர் 13ஆம் தேதி பரிந்துரைத்தது. இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது ட்விட்டர் பக்கத்தில், […]

You May Like