தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள பண்டாரவாடை கரைமேட்டு தெருவை சேர்ந்தவர் செல்வமணி(55). இவருடைய கணவர் சீனிவாசன் ஏற்கனவே உயிரிழந்து விட்டார். என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தன்னுடைய பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்ட நிலையில், செல்வமணி வீட்டில் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இத்தகைய நிலையில், செல்வமணியை கடந்த 5 தினங்களாக காணவில்லை என்று அவருடைய உறவினர்கள் தீவிரமாக தேடி வந்தனர் இதற்கு நடுவே பூட்டிய வீட்டில் இருந்து துர்நாற்றம் வெளியாவதை உணர்ந்த உறவினர்கள் உடனடியாக பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது செல்வமணி அண்டாவிற்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு கொலை செய்து அண்டாவிற்குள் வைத்து சென்ற மர்மநபர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றன.