திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேல செவல் கிராமத்தில் வசிப்பவர் 51 வயதான கிட்டு சாமி என்கிற கிருஷ்ணன். இவர் ஜன.15ஆம் தேதி அங்குள்ள கோவில் வளாகத்தின் உள்ளே மது அருந்திக் கொண்டிருந்த நபர்களை தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மது அருந்திக் கொண்டிருந்தவர்கள், அவரை அடித்துக் கொன்றுள்ளனர். மேலும் இவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதன் காரணமாக 18-24 வயதுடைய 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணன் கோவிலை பராமரித்து வரும் பணியில் இருந்து வந்துள்ளார். அவரிடம் தகராறு செய்து அவரை கொலை செய்தவர்கள் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் பாதுகாப்பு பணிக்காக அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து ட்விட்டரில் பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலை, ‘தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது’ என்று குற்றத்தினை சாட்டியுள்ளார்.
இதனையடுத்து இதனை பற்றி காவல்துறையினர் கூறுகையில், ‘உறவினர்கள் கிருஷ்ணனின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அவர்கள் அரசிடம் இருந்து அரசு வேலை மற்றும் பொருளாதார உதவியை எதிர்பார்க்கின்றனர்’ என்று கூறியுள்ளனர்.