DMK-விடம் பணம் வாங்கிக் கொண்டு தான் கட்சி நடத்துகிறது கம்யூனிஸ்ட்…! இ.பி‌.எஸ் பகீர் குற்றச்சாட்டு…!

Eps

திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கிக் கொண்டு தான் கட்சி நடத்துவதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


வேலூர் மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார பயணத்தின் போது காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் மக்கள் மத்தியில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி திமுக ஆட்சியில் ரத்து செய்யப்பட்ட அனைத்து அதிமுகவின் திட்டங்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தொடரும். திமுக ஆட்சியில் 2,000 அம்மா கிளீனிக்கை மூடிவிட்டார்கள். அதிமுக ஆட்சி அமைந்ததும் 4 ஆயிரம் அம்மா கிளீனிக் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் 6 ஆயிரம் டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக கொடுத்தால்தான் கிடைக்கும். இதில், ஒரு நாளைக்கு 15 கோடி ரூபாய் மேலிடத்துக்கு செல்கிறது. அப்படி என்றால் மாதத்து்க்கு 450 கோடி, வருஷத்துக்கு 5 ஆயிரத்து 400 கோடி, 4 ஆண்டுகளில் ரூ.22 ஆயிம் கோடி மேலிடத்துக்கு போகிறது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா?

“தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்கிறார்கள். இதை தடுக்க இந்த அரசால் முடியவில்லை. இதில், ஆளும் கட்சிக்கு தொடர்பு இருப்பதால் காவல் துறையால் தடுக்க முடியவில்லை. காவல் துறை மானிய கோரிக்கையின் போது பள்ளி, கல்லூரி அருகில் கஞ்சா விற்றதாக 2,348 இடங்கள் என முதல்வர் வெளியிட்ட கொள்கை விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கைது செய்யப்பட்டது 148 பேர்தான். மற்றவர்கள் யாரும் கைது செய்யவில்லை. அந்த மற்றவர்கள் எல்லாம் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் போதைப் பொருளை கட்டுப்படுத்த ஒரு டிஜிபி வந்தார். அவர் 2.0, 3.0, 4.0 என கடைசிவரை ‘ஓ’ போட்டது தான் மிச்சம். ஆனால் ஒன்றும் முடியவில்லை. அவர் ஓய்வு பெறும் வரை ஆகும்வரை போதைப்பொருளை ஒழிக்க முடியவில்லை. திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி பணம் வாங்கிக் கொண்டு தான் கட்சி நடத்துவதாக காட்டிக் கொடுத்ததே திமுக தான். ஒரு தேர்தலில் குறிப்பிட்ட தொகை கணக்கில் கொடுத்ததாக பத்திரிகையில் செய்தி வந்தது. அது இல்லை என அவர்கள் சொல்ல வண்டும். கூட்டணிக்காக தேர்தல் நிதி திமுக கொடுத்ததா..? இல்லையா..? என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார்.

Vignesh

Next Post

மகிழ்ச்சி...! எஸ்.ஐ தேர்வில் புது ரூல்ஸ்...! இனி பொதுப்பிரிவு, காவலர் ஒதுக்கீடு கிடையாது...! தமிழக அரசு அதிரடி...

Wed Aug 20 , 2025
எஸ்.ஐ தேர்வில் இனி காவல் துறை இட ஒதுக்கீடு கிடையாது, அனைவருக்கும் ஒரே மாதிரியான எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், 1,299 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மே 4-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. இதையடுத்து, சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். […]
police tn government 2025

You May Like