சென்னை அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகள் சிறை….! போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி….!

நோய் தொற்று காலகட்டத்தில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்றபோது 11 வயது சிறுமி தன்னுடைய தோழியின் வீட்டிற்கு படிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தோழியின் தந்தை அந்த சிறுமிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பலமுறை பாலியல் வன்கொடுமையை செய்ததாக கூறப்படுகிறது.


இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் வழங்கிய புகாரை அடிப்படையாகக் கொண்டு, அடையார் அனைத்து மகளிர் காவல் துறையினர் அந்த நபரை கைது செய்தனர்.

இந்த வாழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குற்றம் சுமத்தப்பட்ட ரியல் ஸ்டேட் அதிபருக்கு 20 ஆண்டுகால கடுங்காமல் சிறை தண்டனையும், மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அதோடு இந்த அபராத தொகையை சிறுமிக்கு வழங்கவும், மேலும் தமிழக அரசு சார்பாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 7 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Post

சென்னை அருகே முன்விரோதம் காரணமாக ரவுடியை கொல்ல முயற்சி….! நூலிழையில் தப்பிய அதிர்ஷ்டம்…..!

Thu May 18 , 2023
சென்னை மதுரவாயில் மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் தீனா என்கின்ற தீனதயாளன்( 22). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கின்றன. குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் தான் இவர் வெளியே வந்திருக்கிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் விருகம்பாக்கம் ஏரிக்கரை சாலையில் இருக்கின்ற பஞ்சர் கடையின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் […]
WhatsApp Image 2023 01 08 at 1.28.37 PM

You May Like