பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய ஊர்காவலர்.!

சேலம் பகுதியில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25) என்பவர். சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் தற்போது பணியாற்றி வருகின்றார். அந்த பகுதியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவியை ஒருதலையாக சில நாட்கள் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பலமுறை தனது காதலை மாணவியிடம் சொல்லிய நிலையில், அதனை மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை.


இந்த நிலையில் சென்ற 7 ஆம் தேதி, மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் , பின்தொடர்ந்த அறிவழகன் தன்னை காதலித்தே ஆக வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.

இவரின் செயலால் பயந்து போன மாணவி, இதனை பற்றி தன்னுடைய தாயாரிடம் தெறிவித்துள்ளார். இதனையடுத்து அவருடைய தாயார் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல்நிலைய போலீசார் இந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

1newsnationuser5

Next Post

#கன்னியாகுமரி: கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை குடுத்த திருமணமான நபர்..!

Sat Nov 12 , 2022
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சியாஹி(22) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் கல்லூரியில் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு சியாஹியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தினால் பலமுறை மாணவியும், சியாஹியும் பேசி கொண்டும் , புகைப்படமும் எடுத்துக் கொண்டும் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி சில நாட்களாக சியாஹியுடன் பழகுவதை திடீரென குறைத்துள்ளார். இந்த செயலால் கோபமடைந்த சியாஹி, நாம் இருவரும் […]
n4408923281668238643823e92548d6b68af7313687530e773ee408a6a883dbc4eca9158735b7b7a52396a5

You May Like