தமிழ்நாட்டைச் சார்ந்த கலெக்டர் ஒருவர் உதவியாளரை தனது காலணிகளை தூக்கி வருமாறு கட்டளையிட்டதாக வெளியான வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கலெக்டர் சரவணகுமார் ஜதாரவத் கோவிலுக்குள் சாமி கும்பிட சொல்லும் போது தனது காலணிகளை உதவியாளரிடம் தூக்கி வரச் சொல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பதிலளித்துள்ள கலெக்டர் தான் அப்படி கூறியதாக சொல்வது பொய் என்றும் அந்த வீடியோ தவறான நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரவி மக்கள் பலரும் கலெக்டரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.
கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வெளியே எடுக்கப்பட்ட அந்த வீடியோவை கலெக்டர் பொய்யான வீடியோ என சித்தரிக்கிறார். ஆனால் அந்த வீடியோவில் அவர் தனது உதவியாளரை கோவிலுக்குள் செல்லும்போது தன்னுடைய காலணிகளை கொண்டு காரில் வைக்குமாறு சைகை செய்வது போன்ற அந்த வீடியோவானது பதிவாகி இருக்கிறது. இது வைரலாகி பல்வேறு தரப்பு மக்களும் கலெக்டருக்கு தன்னுடைய கண்டனங்களை தெரிவித்து வரும் வேலையில் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு மக்களும் பல்வேறு விதமான கருத்துக்களை பதித்து வருகின்றனர்.