“ஷூ வை நான் எடுக்க சொல்லவில்லை”! காலணிகளை தூக்கி வரச் சொன்ன கலெக்டர் விவகாரம்! கலெக்டர் மறுப்பு!

தமிழ்நாட்டைச் சார்ந்த கலெக்டர் ஒருவர் உதவியாளரை தனது காலணிகளை தூக்கி வருமாறு கட்டளையிட்டதாக வெளியான வீடியோ பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சார்ந்த கலெக்டர் சரவணகுமார் ஜதாரவத் கோவிலுக்குள் சாமி கும்பிட சொல்லும் போது தனது காலணிகளை உதவியாளரிடம் தூக்கி வரச் சொல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக பதிலளித்துள்ள கலெக்டர் தான் அப்படி கூறியதாக சொல்வது பொய் என்றும் அந்த வீடியோ தவறான நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த சம்பவமானது சமூக வலைதளங்களில் பரவி மக்கள் பலரும் கலெக்டரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.


கூவாகம் கூத்தாண்டவர் கோவிலுக்கு வெளியே எடுக்கப்பட்ட அந்த வீடியோவை கலெக்டர் பொய்யான வீடியோ என சித்தரிக்கிறார். ஆனால் அந்த வீடியோவில் அவர் தனது உதவியாளரை கோவிலுக்குள் செல்லும்போது தன்னுடைய காலணிகளை கொண்டு காரில் வைக்குமாறு சைகை செய்வது போன்ற அந்த வீடியோவானது பதிவாகி இருக்கிறது. இது வைரலாகி பல்வேறு தரப்பு மக்களும் கலெக்டருக்கு தன்னுடைய கண்டனங்களை தெரிவித்து வரும் வேலையில் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு மக்களும் பல்வேறு விதமான கருத்துக்களை பதித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

மனைவியை ஆபாச படம்.... சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டிய கணவர்! 5 ஆண்டு சிறை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Wed Apr 12 , 2023
திருச்சியில் மனைவியின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்புவதாக விரட்டிய கணவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். திருச்சியைச் சார்ந்த யோக பிரியா என்பவர் தனது கணவரான தேவானந்த் தன்னை ஆபாசமாக படம் எடுத்து அந்தக் காணொளிகளை சமூக வலைதளங்களில் பரப்புவதாக மிரட்டி வருகிறார் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையரிடம் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் தெரிவித்தார். அந்தப் புகாரின் […]
IMG 20230412 WA0259

You May Like