உணர்வு என்பது எல்லோருக்கும் ஒன்றுதான். அந்த உணர்வை கட்டுப்படுத்த தெரிந்தால் நிச்சயமாக நாம் வாழ்வில் ஒரு நல்ல நிலையை அடையலாம்.ஆனால் மனதில் ஏற்படும் தேவையற்ற உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் அதற்கு மதிப்பளித்து நாம் செயல் பட்டால் சமூகத்தில் நம்முடைய சுயமரியாதை அந்தஸ்து அனைத்தும் நிர்மூலமாகிவிடும். நம்முடைய மனதையும், உணர்வையும் நம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும்.
சென்னை புழலை அடுத்துள்ள லட்சுமிபுரம் குமரன் தெருவை சேர்ந்தவர் சுதா சந்தர்( 22) தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வரும் இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் தான் ஆவடி வேளச்சேரியில் இருந்து இங்கே குடிபெயர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு 8.3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளம் பெண்ணுடன் கல்பாளையம், வில்லிவாக்கம் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த சில மர்ம நபர்கள் சுதா சந்தரை வழிமறித்திருக்கிறார்கள்.
அதன் பிறகு அவர்கள் வாகனத்திலிருந்து இறங்கியவுடன் கத்தியுடன் இறங்கிய அந்த கும்பல் அந்த நபரை சரமாரியாக விட்டி விட்டு தப்பி சென்று விட்டது இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சுதா சந்தர் தன்னுடன் வந்த பெண்ணின் கண்முன்னே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த ஊழல் காவல்துறையினர் சுதா சந்திரன் அந்த ராகவி (19) என்ற இளம் பெண்ணை விசாரித்தனர் அதில் பல பகீர் தகவல்கள் கிடைத்தனர்.கொலை செய்யப்பட்ட சுதா சந்தர் ஆவடி வேளச்சேரியில் பள்ளி படிப்பை படித்து வந்தபோது ராகவியை காதலித்தந்திருக்கிறார்.
இருவரும் பல இடங்களில் சுற்றி திரிந்து காதலித்து வந்திருக்கிறார்கள் இந்த நிலையில் அவர்களுடைய காதலை ராகவியின் பெற்றோர் எதிர்த்திருக்கிறார்கள்.சுதா சந்தருடனான பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பலமுறை பெற்றோர் எச்சரித்திருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் தான் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். ஆனாலும் காவல்துறையினரின் உதவியுடன் அவர்களை கண்டுபிடித்து ராகவியை வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். அவருடைய பெற்றோர் அதன் பிறகு உடனடியாக உறவினரான வசந்த் என்ற நபருக்கு ராகவியை திருமணம் செய்து வைத்தனர்.
வசந்த் மூலமாக ராகவிக்கு குழந்தை பிறந்தது தற்சமயம் அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது என்ற நிலையில், சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு ராகவி திடீரென்று காணாமல் போனார்.
காதலன் சுதா சந்தருடன் இருந்த ராகவியை காவல்துறையினரின் உதவியுடன் மீட்டு வந்திருக்கிறார்கள். சுதா சந்தருடன் வசித்து வந்ததால் கோபமடைந்த ராகவியின் சகோதரர் பரத்துடைய நண்பரான உதயா என்ற நபருடன் இனைந்து சுதா சந்தரை வெட்டி கொலை செய்திருக்கிறார். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள புழல் காவல்துறையினர் தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர்.