’அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மெஷின் வெச்சிருக்கீங்க’..? கொந்தளித்த மன்சூர் அலிகான்..!!

வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் ‘பலாப்பழம்’ சின்னத்தில் போட்டியிடும் மன்சூர் அலிகான் வாக்குப்பதிவு மையங்களை பார்வையிட்டார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவரது பலாப்பழச் சின்னம் மீது வெளிச்சம் படாததால் மன்சூர் அலிகான் கடுப்பாகி அங்கிருந்த தேர்தல் அலுவலர்களிடமும் கோபம் காட்டினார். ”இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. முதல் இயந்திரத்தில் பிரதான வாக்காளர்களின் சின்னம் ‘பளீச்’ என்று தெரிகிறது.

ஒன்று, இரண்டு என்று மக்கள் அவர்களின் சின்னங்களை பார்த்து குத்திவிட்டுச் சென்றுவிடுவார்கள். ஆனால், 2-வது இயந்திரம் மீது வெளிச்சம் படவில்லை. லைட்டுகளை அணைத்து வைத்திருக்கிறார்கள். இதனால் அதில் உள்ள சின்னங்கள் கண்களுக்கே தெரியவில்லை. என்னுடைய பலாப்பழச் சின்னமும் இருட்டாகத் தெரிகிறது. அது பூசணிக்காயா அல்லது பலாக்காயா அல்லது வேறு எந்தக் காய் என்றே தெரியவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால், ‘பக்கத்தில் வி.வி.பேட் இருக்கிறது. அதன் மீது லைட் படக் கூடாது’ என்கிறார்கள். அப்புறம் எப்படி மக்கள் சின்னத்தை பார்ப்பார்கள். வி.வி.பேட் மீது லைட் படக் கூடாது என்றால் அப்புறம் என்ன வெங்காயத்துக்கு மெஷின் வைத்திருக்கிறார்கள். பேசாமல் பேப்பரில் குத்தி ஓட்டுப் போட்டிருக்கலாமே?. ஆயிரத்தெட்டு மெஷின் எதற்கு?” என்று கொதித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

Read More : ’எத்தனையோ முறை சொல்லியும் கேட்கல’..!! இத்தனை கிராமங்களா..? ஒருத்தரும் ஓட்டுப் போடலையாம்..!!

Chella

Next Post

'INDIA' அணிக்கு ஓட்டு போடுங்க..? பரபரப்பை கிளப்பிய பாஜக நடிகை குஷ்புவின் பதிவு..!!

Fri Apr 19 , 2024
மக்களவை தேர்தலில் நடிகை குஷ்பு வாக்களித்த பின்னர் பகிர்ந்த ட்வீட் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மேலும், பொதுமக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும், தேசிய மகளிர் நல ஆணைய உறுப்பினருமான நடிகை […]

You May Like