காவலருக்கு அரிவாள் வெட்டு…..! குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்…..!

திருவாரூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராஜ்குமார் என்பவரை 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அறிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது. இந்த வடக்கில் ஒளிமதி கிராமத்தில் வசித்து வரும் ஸ்டாலின்பாரதி, வீரபாண்டியன் போன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரவீன் என்பவர் மல்லிப்பட்டினம் என்ற பகுதியில் தலைமறைவாக இருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தது.


ஆகவே மணல்மேடு காவல்துறை ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் காவல்துறையினர் பிரவீனை கைது செய்வதற்காக அந்த பகுதிக்கு சென்றனர். அப்போது உதவி ஆய்வாளர் இளங்கோவை அறிவாளால் வெட்டிவிட்டு பிரவீன் அவர்களிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இதனால் ஆத்திரம் கொண்ட ஆய்வாளர் ராஜேஷ் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பிரவீன் காலில் சுட்டார். இதனால் அவர் துடிதுடித்து கீழே விழுந்தார். உடனடியாக காயமடைந்த உதவி ஆய்வாளர் இளங்கோ மற்றும் பிரவீன் உள்ளிட்ட இருவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Post

பணம் கொடுத்து கத்தி கூச்சலிட சொன்ன சூரி..!! இப்படி ஒரு விளம்பரம் தேவையா..?

Sun Mar 12 , 2023
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்த ’விடுதலை’ படம் இம்மாதம் கடைசியில் வெளியாகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கான பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில், சூரி மட்டுமே நிறைய நேரம் பேசினார். நிறைய கஷ்டங்களை அனைவரிடமும் பகிர்ந்து கொண்டார். ஆனால் இவர் பேசும்போதும் சரி, இவர் பெயரை யாரும் சொன்னாலும் சரி உச்ச நட்சத்திரங்கள் பெயர்களை கூறும்பொழுது கைத்தட்டல் வருவது மாதிரி இவருக்கு வந்து கொண்டே இருந்தது. […]
vetrimaran 16783346173x2 1 e1678349633286

You May Like