6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜுன் 23 முதல் 27-ம் தேதி வரை இது கட்டாயம்…! பள்ளி கல்வித்துறை அதிரடி

Teachers School 2025

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு வாரம் ஜூன் 23 முதல் 27 வரை அனுசரிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநனர்; அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்; தமிழ்நாடு மாநில குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை உலக போதைப் பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் எதிரான மாநில அளவிலான விழிப்புணர்வு வாரத்தை “போதைப் பொருள் விழிப்புணர்வு வாரம் ” (Drug- free awareness week) என்ற தலைப்பில் ஜுன் 23 முதல் ஜுன் 27 வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

என் எதிர்காலம். என் தேர்வு போதைப்பொருள் வேண்டாம் என்று சொல்லுங்கள் என்ற தலைப்பில், இந்த வாரம், 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களிடையே, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்க பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு எளிய, சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்ட செயல்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு கூடுதல் வளங்கள் அல்லது வெளியிலிருந்து ஏற்பாட்டாளர்கள் தேவையில்லை; பள்ளியின் வழக்கமான நிகழ்ச்சிகளில் எளிதாக இணைக்கலாம்.

எல்லா செயல்பாடுகளும், பள்ளிகளில் ஏற்கனவே உள்ள போதை எதிர்ப்பு மன்றங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இந்த மன்றங்கள். மாணவர்களையும். ஆசிரியர்களையும். விழிப்புணர்வு செயல்பாடுகளில் ஈடுபடுத்தும். இதன் மூலம் முழு பள்ளி சமூகமும் போதைப்பொருள் இல்லாத சூழலை உருவாக்குவதில் அர்த்தமுள்ள வகையில் ஈடுபடுவதை உறுதி செய்யலாம். இவ்விழப்புணர்வு வாரத்தின் நிகழ்வுகளை மாவட்டத்தில் உள்ள மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவித்து ஒருங்கிணைந்து நடத்திட வேண்டும். நிகழ்வுகளின் புகைப்படங்கள் மற்றும் சிறந்த காணொளிகளை தொகுத்து சமர்ப்பித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More: மனிதர்களே கிடையாது.. பஸ் ஸ்டாப் முதல் டீ கடை வரை மனித பொம்மைகள் வாழும் அதிசய கிராமம்..!!

Vignesh

Next Post

இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை!. இன்று உலக இசை தினம்!

Sat Jun 21 , 2025
இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை கவலைக்கு மருந்தாகவும், பொழுதுபோக்கும் அம்சமாகவும் திகழ்கிறது. வரும் தலைமுறையினருக்கு இசை ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாராட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசை தோன்றி விட்டது. ஆரம்பத்தில் இசை என்பது மனிதன் மற்றும் பறவை, விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்களின் சத்தத்தின் மூலம் உருவானது. பறவைகளின் சத்தம் ஒருவிதமாகவும், விலங்குகளின் […]
world music day 11zon

You May Like