தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது…..? ஆளும் கட்சியை வறுத்தெடுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்…..!

அரசியலில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதும் எதிர்க்கட்சி ஆளும் கட்சியை விமர்சனம் செய்வதும் சகஜமான விஷயம்தான். ஆனால் இருவரும் மாறி மாறி தங்களை விமர்சனம் செய்து கொள்வதில் எந்தவித பயனும் கிடையாது.


யார் மீது யார் விமர்சனம் வைத்தாலும் தங்கள் மீது தவறு இருந்தால் அதனை நிச்சயமாக திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும், அப்போதுதான் அது ஆரோக்கியமான அரசியலாக இருக்க முடியும். ஆனால் அந்த செயலை இதுவரையில் யாரும் செய்தது கிடையாது.

தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றனர் இதன் காரணமாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது என்று பொதுமக்கள் முதல் சாதாரண பாமர மக்கள் வரையில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால் மறுபுறமும் ஆளுங்கட்சி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று கூறுகிறது. ஒருபுறம் முதலமைச்சரோ சட்டம் ஒழுங்கு என்னுடைய நேரடி பார்வையில் இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்கிறார்.

இதற்கிடையே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்ததிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்று தொடர்ச்சியான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றார். அதற்கு ஏற்றார் போல சென்னையில் நகை கடையில் கொள்ளை திருவண்ணாமலை ஒரே இரவில் 4️ ஏ டி எம் மையங்களை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் நடந்தேறியது.

இதற்கெல்லாம் மேலாக கோவை நீதிமன்ற வளாகத்தின் பின்புறத்தில் பட்ட பகலில் ஒரு வாலிபர் ஐந்து பேர் கொண்ட மருமகம்பலால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட காணொளி வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்று குற்றம் சுமத்தினார்.

மேலும் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பிட்டர் பதிவில் கோவையில் வீடு புகுந்து துப்பாக்கியால் சுட்டும், அரிவாளால் வெட்டியும் படுகொலை நடைபெற்றிருக்கிறது. அதேபோல அதே கோவையில் நீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான ஒரு கண் முன்னே ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் தொடர் கொள்ளை, சென்னையில் நகை கடையில் கொள்ளை போன்ற சம்பவங்களை கண்முன்னே பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விட்டதோ? என்ற கேள்வி எழுபதோடு, நிர்வாகத் திறன் இல்லாத இந்த ஆட்சியில் பொதுமக்கள் வெளியே நடமாடுவதற்கு பயப்படுகிறார்கள், தமிழ்நாட்டில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கின்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று சாடியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு இதுவே ஒரு சாட்சி. இந்த விடிய அரசின் முதலமைச்சர் உடனடியாக மக்களின் அடிப்படை பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சரியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

Next Post

வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர்…..! போலீசாரிடம் புகார் வழங்கிய மனைவி……!

Tue Feb 14 , 2023
ஈரோடு மாவட்டம் மடச்சூரை சேர்ந்த லிவிங்ஸ்டன் ஜெயபால் 30 என்ற நபருக்கும், திண்டுக்கல் மாவட்டம் பொம்ம பட்டியை சேர்ந்த அபிதா (23)என்ற பெண்ணுக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. லிவிங்ஸ்டன் ஜெயபால் திருமணம் நடைபெற்றபோது தான் ஒரு மத்திய அரசு ஊழியர், மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதை நம்பிய அபிதாவின் குடும்பத்தை சார்ந்தவர்கள் லிவிங்ஸ்டனுக்கு 1 லட்சம் ரூபாயும், 20 […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like