முகத்தில் சிறிதாக முகப்பரு வந்தாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கின்றவர்களுக்கு, அதனை எளிய முறையில் சரி செய்ய இந்த பதிவினில் காணலாம்.
செயற்கை முறையில் இருக்கும் கிரீம் போன்றவற்றை தவிர்த்து விட்டு வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே இதற்கான தீர்வை காண முடியும். அந்த வகையில் இன்று முகத்தினை பொலிவாக்கும் கிராம்பு பற்றி பார்க்கலாம்.
கிராம்பு, நமது முகத்தில் இருக்கும் பருக்களை குணப்படுத்தும் ஒரு மருந்து தான் என்றால் நம்ப முடிகிறதா. 2 அல்லது 3 கிராம்பினை எடுத்து நீரில் போட்டு அதனை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு கிராம்பினை தனியாக எடுத்து குளிர வைக்க வேண்டும்.
குளிர வைத்த கிராம்பினை அரைத்து பருக்கள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். அத்துடன் சிறிது நேரம் கழித்து காய்ந்த பின்பு கழுவிவர பருக்கள் குணமடைவதை பார்க்கலாம்.