சமீப காலமாக தமிழகத்தில் கொலை உள்ளிட்ட சம்பவங்கள் சர்வ சாதாரணமாக, நடைபெற்று வருகின்றனர்.
இது போன்ற சம்பவங்களை பார்க்கும் போது, தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? அல்லது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் தான் இருக்கிறதா? சட்டம் ஒழுங்கு என்னானது? என்று பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகின்றனர்.
இது தொடர்பாக எதிர்கட்சிகளும் சட்டசபையில் ஆளும் தரப்பை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக தமிழக காவல்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருந்தாலும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு தமிழகம் முழுவதும் அவபோது இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றனர்.
அந்த வகையில், தூத்துக்குடி கிருபை நகர் 5வது தெருவை சேர்ந்தவர் உச்சிமாகாளி மகன் பாண்டி 59 இவர் அந்த பகுதியில் குப்பை பொறுக்கும் பணியை செய்து வருகிறார். இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி முனியசாமி நகர் பகுதியில் அவர் நடந்து வந்து கொண்டிருந்த சமயத்தில், ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்து கத்தி அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்குதல் நடத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக தகவலறிந்த தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவல்துறை சார்ந்தவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் கொலை செய்யப்பட்ட பாண்டி கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, அதன் பிறகு கடந்த 10 வருடங்களுக்கு விடுதலை செய்யப்பட்டார் என்ற விவரம் தெரிய வந்தது.
ஆகவே முன்விரோதத்தின் காரணமாகத்தான் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தங்களுடைய விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்யராஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.