தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி, சேலம் மாவட்டத்தில் 11.06.2025 மற்றும் 12.06.2025 ஆகிய நாள்களில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்திற்கு 2 நாள் பயணமாக இன்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 11 கி.மீ. ரோடு ஷோவில் பங்கேற்கிறார். 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்து வைக்கிறார். முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக சேலத்துக்கு இன்று வருகிறார். காலை 10 மணிக்கு சென்னையிலிருந்து விமானத்தில் கோவை வரும் முதல்வர் அங்கிருந்து சாலை மார்க்கமாக ஈரோடு மாவட்டம் பெருந்துறை செல்கிறார். அங்கு நடைபெறும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து 50,000 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
பின்னர் அன்று மாலை சேலம் செல்லும் முதல்வர் திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அன்றிரவு மேட்டூரில் தங்குகிறார். மறுநாள் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைக்கிறார். பின்னர் சேலம் இரும்பாலை அருகேயுள்ள அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். விழாவில், ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்தும் முதல்வர் பேசுகிறார்.