சொந்த தாயை தவறாக வீடியோ எடுத்த இளைஞர்! அதிர்ச்சியில் உறைந்த காவல்துறையினர்!

கைபேசி என்ற ஒரு கருவி பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இந்த கைபேசியில் ஒட்டுமொத்த உலகமும் அடங்கி விடுகிறது. அந்த கைபேசியில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது இருந்தாலும் கைபேசியை பயன்படுத்தும் விதத்தில் தான் அது நல்ல விஷயங்களுக்கு பயன்படுகிறதா? அல்லது சீர்கேடான விஷயங்களுக்கு பயன்படுகிறதா? என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.


சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்த 24 வயதான கர்ப்பிணி பெண் ஒருவர் குளியலாடும்போது ஜன்னலில் இருந்து ஒரு மர்ம நபர் வீடியோ எடுத்திருக்கிறார். இதனைக் கண்ட அந்த இளம் பெண்ணின் கணவர் அந்த நபரை துரத்தி பிடித்து குமரன் நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவருடைய பெயர் ஸ்ரீராம் எனவும், கிண்டியில் இருக்கின்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து அந்த ஆசாமியின் கைபேசியை வாங்கிய காவல்துறையினர் அதில் செய்த ஆய்வில், பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தனர். மேலும் அந்த செல்போனில் பல பெண்கள் குளியலாடும் வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. தொடர்பாக காவல்துறையினருக்கு தெரிய வந்தது.

அத்துடன் அந்த ஆசாமியின் சொந்த தாய் குளிக்கும் வீடியோவும் இதில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ந்து போன காவல் துறையினர், இந்த வீடியோ பதிவுகளை வைத்து அவர் என்ன செய்கிறார் என்று தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Post

#Alert: தமிழகத்தில் புயல் எச்சரிக்கை...! கடலோர மாவட்ட மக்கள் எல்லாம் கவனமாக இருங்க...!

Thu Dec 8 , 2022
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இன்று மாலை புயலாக வலுப்பெற கூடும். இதன் காரணமாக 8, 9, 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும். இன்று தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் […]

You May Like