குழந்தைகள் மற்றும் இளம் வயதினரை நீண்ட நேரம் சமூக வலைதளங்களில் இருக்க வைக்கும் வகையில் தங்களது தளங்கள் வடிவமைக்கப்பட்டதாக மெட்டா நிறுவனத்திற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் செயல்பாடுகள் குறித்து பல முக்கியமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொழில்நுட்ப உலகில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் 29 மாகாணங்கள் இணைந்து மெட்டாவுக்கு எதிராக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. குழந்தைகளின் மனநலனை பாதிக்கும் […]
mobile
தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய திரையுலகில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகை ஷகீலா, தற்போது உடல்நலப் பிரச்சினை காரணமாக கழுத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதிக நேரம் மொபைல் போனை பயன்படுத்தியதும், தவறான உடல் நிலையில் நீண்ட நேரம் இருந்ததுமே தனது உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய ஷகீலா, தனது யூடியூப் சேனல் மூலம் உடல்நிலை குறித்த தகவல்களை […]
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த கணவர், மனைவியின் செல்போனை சோதித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படும் சம்பவம் தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவரை சாலை விபத்து போல சித்தரித்து கொலை செய்ய மனைவி, தனது ஆண் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டதாக கூறப்படும் நிலையில், அந்த உரையாடல்களின் ஸ்கிரீன்ஷாட்களை கணவர் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். மஹபூபாபாத் மாவட்டம் சிலாகோடு கிராமத்தைச் சேர்ந்தவர் காடே ராஜேஸ்வர் ராவ். கம்மம் பகுதியில் உள்ள தனியார் […]
மழைக்காலத்தில் உயிரிழப்பைத் தடுக்க மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மின்சாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவமழை காலங்களில் பொதுமக்கள் பின்வரும் மின்சார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள நபர்கள் மற்றும் மின் ஒப்பந்தக்காரர்கள் மூலமாக மட்டுமே செய்ய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை பெற்ற, தரமான வயர்கள் மற்றும் மின்சாதனங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். ரெஃப்ரிஜிரேட்டர், கிரைண்டர் போன்ற வீட்டு உபயோக […]
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 குறித்த ஆலோசனைகள் தெரிவிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) தெரிவித்துள்ள வரைவு தொலைத்தொடர்பு கட்டண (72-வது திருத்தம்) ஆணை 2025 மற்றும் அதன் தனிப்பட்ட கணக்கு விபர ஒழுங்குமுறை அறிக்கை (திருத்தம்) தொடர்பான வரைவு அறிக்கை தொடர்பாக கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்கு இம்மாதம் 31-ம் தேதி வரை […]

