முன்பெல்லாம் ஒரு ஆணோ அல்லது 2️, 3️ ஆண்கள் சேர்ந்து கூட்டாகவோ ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்திற்கு புகார் வரும்.காவல்துறையினரும் அந்த புகாரின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு குற்றவாளிகளை கண்டு பிடித்து அவர்களுக்கு சிறை தண்டனை வாங்கி தருவார்கள்.
ஆனால் தற்போது ஒரு வினோதமான சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்றுள்ளது.அதாவது, மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே நகரில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகியதாக அக்காவின் மீது தங்கை பாலியல் புகார் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
24 வயதான அக்கா திருமணம் நடைபெற்ற பின்னரும் தன்னுடைய தந்தை வீட்டில் வசித்து வந்திருக்கிறார். சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 18 வயது தங்கையை அக்கா பாலியல் ரீதியாக தொந்தரவுகளுக்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ந்து போன தங்கை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.ஆனாலும் அக்கா தன்னுடைய தங்கையை பலவந்தப்படுத்த முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. இதனால் தங்கை வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். மேலும் காவல்நிலையத்தில் இது தொடர்பாக புகார் வழங்கினார்.இந்த புகாரை கேட்டு அதிர்ச்சிக்குள்ளான காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.