சென்னையைச் சார்ந்த 16 வயது சிறுமிக்கு கிளப் ஹவுஸ் மூலம் அறிமுகமாகி அந்த சிறுமியிடம் அத்துமீறிய இளைஞரை சென்னை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்திருக்கின்றனர்.
சென்னையில் அயனாவரத்தைச் சார்ந்த 16 வயது சிறுமி காணாமல் போய்விட்டதாக அவரது பெற்றோர் காவல் துறையில் புகாரளித்தனர். அந்த புகா பெற்றுக்கொண்ட காவல் துறையினர் விசாரணையின் போது சிறுமி தாயாரின் செல்போனை எடுத்துக் கொண்டு மாயமாகியுள்ளது தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் அந்த செல்போனை தொடர்பு கொண்ட காவல் துறை சிறுமியிடம் பேசியதை அடுத்து சிறுமி மறுநாளே வீட்டிற்கு திரும்பினார். வீட்டிற்கு வந்த சிறுமியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திருக்கின்றனர்.
அந்த விசாரணையில் கிளப் ஹவுஸ் என்ற செயலியின் மூலம் அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்ததாகவும் அப்படி நண்பராக அறிமுகமான ஒருவர் தான் நிஷாந்த் குமார். பின்னர் நிஷாந்த் குமாரும் சிறுமியும் காதலிக்க தொடங்கியிருக்கின்றனர். இந்தக் காதலுக்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே சிறுமி அவரது தாயாரின் செல்போனை எடுத்துக்கொண்டு நிஷாந்த் குமாருடன் சென்றுள்ளார். பின்னர் காவல் துறையினர் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசியதால் பயந்து போன நிஷாந்த் சிறுமியை அவரது வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
சிறுமி வீட்டிற்கு திரும்பிய பின்னரும் அவருடன் செல்போன் மூலம் பேசி வந்துள்ளார் நிஷாந்த் குமார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த செல்போனை ஆய்வு செய்து பார்த்ததில் நிஷாந்த் குமார் சிறுமியிடம் மிகவும் ஆபாசமாக பேசியிருப்பது தெரிய வந்திருக்கிறது. உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கிய போலீஸ் காட்பாடி சார்ந்த நிஷாந்த் குமாரை தனிப்படை அமைத்து கைது செய்தனர். கடந்த எட்டு மாதங்களாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில் பதுங்கியிருந்த நிஷாந்த் குமாரை கைது செய்த தனிப்படை அதிகாரிகளையும் இந்த விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளையும் உயர் அதிகாரிகள் பாராட்டினர்.