கோவையில் சரவணகுமார் என்பவர் கண்ணாடி கடை நடத்தி வருகிறார். இவர் சுமார் 7 வருடங்களுக்கு முன்னர் ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து இருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கணவன், மனைவி இருவரும் பிரிந்து விட்டனர்.
ஆனால் சரவணகுமாரின் மனைவி பரத் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்திருக்கிறார் இந்த நிலையில் சரவணகுமார் தன்னுடைய குழந்தையை தன்னிடம் கொடுத்து விடுமாறு தெரிவித்து அந்த பெண்ணை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.சரவணக்குமார் மதுரை, செல்லூர் அருள்தாஸ்புரத்தை சார்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. இவருடைய தந்தையின் பெயர் சங்கர், அதோடு சரவணகுமார் ஓட்டுநராகவும் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சரவணகுமார் மதுரைக்கு வந்திருக்கிறார். நேற்று பிற்பகலில் தத்தனேரி மயான பகுதியிலிருந்து தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைகை வடகரை சாலைக்கு சரவணகுமார் சென்றுள்ளார். அப்போது அவரை பின்பு வேகமாக காரில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் இருசக்கர வாகனத்தை மறித்து அவரை கீழே தள்ளிவிட்டு அறிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றது.
இது தொடர்பாக தகவல் அறிந்த மதுரை செல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சரவண குமாரின் உடலை மீட்பு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை தொடங்கினர். அந்த விசாரணையில், சரவணகுமாரின் முன்னாள் மனைவியிடம் சரவணகுமார் தன்னுடைய குழந்தையை தன்னிடம் வழங்கி விடுமாறு கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததால் அந்த பெண்ணின் தூண்டுதலின் அடிப்படையில் சரவணக்குமார் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் 2வது கணவர் பாரத் உள்ளிட்டோரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்.