அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி போட அழைத்துச் செல்லப்பட்ட 2 வயது பெண் குழந்தை, ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைக்கு தவறான தடுப்பூசி செலுத்தப்பட்டதே மரணத்துக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியதுடன், மருத்துவமனை வளாகத்தில் திரண்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
குழந்தைக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக அவரது தந்தை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பணியில் இருந்த மருத்துவர் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். தடுப்பூசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே குழந்தையின் உடல்நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர். குழந்தைக்கு தவறான தடுப்பூசி செலுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, மருத்துவமனை வளாகத்தில் திரண்டு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து போலீசார் மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், குழந்தையின் உயிரிழப்பு தொடர்பான விவகாரத்தை சமாளிக்க மருத்துவர் போலீஸாருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதில், சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ்காரர் ஒருவர் அந்தப் பணத்தை பெற்றதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தினர். இந்த நிகழ்வை தாங்கள் நேரில் பார்த்ததாக கூறி அவர்கள் போலீசாரிடம் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குழந்தையின் உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணை நடத்த வேண்டும் என குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். தடுப்பூசியின் தன்மை, குழந்தைக்கு வழங்கப்பட்ட மருந்து, செலுத்தப்பட்ட நடைமுறை உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதனிடையே, மருத்துவ அலட்சியம் மற்றும் லஞ்சம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணையின் முடிவில்தான் குழந்தையின் உயிரிழப்புக்கான காரணமும், குற்றச்சாட்டுகளின் உண்மை நிலையும் முழுமையாக தெரியவரும்.
Also Read: வேலை தேடி சென்ற கல்லூரி மாணவி.. தனி அறையில் நடந்த அதிர்ச்சி! பர்னிச்சர் கடை உரிமையாளர் கைது..



