திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள எண்ணூரில் 4வது தெருவில் விசிக பிரமுகரான தனசேகர் (48) எனபவர் மனைவி தீபா (40) மற்றும் ஒரு மகன் இருக்கிறான். தம்பதிகளுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தனியாக வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர்.
இந்த நிலையில் மனைவி தீபா மற்றும் மகன் பிரவீனுடன் திருவொற்றியூர் பகுதியில் தனது அம்மா வீட்டிலேயே வசித்து வருகிறார். இதனிடையில் தனசேகர் மிகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். சில தினங்களுக்கு பிறகு குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்துள்ளது.
நேற்று காலையில், தனசேகருக்கு கடன் தந்ந 2 நபர்கள், அதனை கேட்பதற்காக அவரின் வீட்டுக்கு வந்துள்ளனர். மேலும், அங்கு சென்ற நிலையில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது பற்றி எண்ணூர் பகுதி காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது, தனசேகர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். மேலும் இந்த நிலையில், அவரின் தலையில் காயம் இருந்ததாக கூறுகின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.