சென்னை மாவட்ட பகுதியில் உள்ள பட்டாபிராமில் ,3வது தெருவில் விஜயகுமார் வசித்து வந்துள்ளார். அவர் ஓட்டுநராக இருந்தார். விஜயகுமாரின் மனைவி கணவரை பிரிந்து மகனுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார். இதனால் கடந்த மாதம் 28ம் தேதி மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து கண்டு வீட்டின் உரிமையாளர் இதனை பற்றி பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அழுகிய நிலையில் கிடந்த விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனை தொடர்ந்து தகவலின் பேரில் வழக்குபதிவு அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.