புளோரிடா மாநிலம் டேடோனா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயுடன் போராடி வந்த கணவர் (77) அவரது மனைவியால் (76) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பொலிசார் விசாரணை நடத்தியதில், நோய்வாய்ப்பட்ட முதியவர் நீண்ட நாட்களாக கடும் வலியால் துடித்த நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்றது தெரிய வந்தது.
ஆனால் அது சாத்தியமில்லை என்று தெரிந்ததும், கணவனை சுட்டு விட்டு, கணவனுடன் சேர்ந்து வாழ்க்கையை முடிக்க மனைவி தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முடிவு செய்தாள்.
கடந்த மூன்று வாரங்களுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவரை துப்பாக்கியால் சுட்ட மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.