கணவனை சுட்டுக் கொன்ற மனைவி.. காரணம் இதுதானா..!

புளோரிடா மாநிலம் டேடோனா கடற்கரையில் உள்ள மருத்துவமனையில் தீராத நோயுடன் போராடி வந்த கணவர் (77) அவரது மனைவியால் (76) சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


துப்பாக்கிச் சூடு நடந்த மருத்துவமனைக்கு வந்த போலீசார், அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். அவர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பொலிசார் விசாரணை நடத்தியதில், நோய்வாய்ப்பட்ட முதியவர் நீண்ட நாட்களாக கடும் வலியால் துடித்த நிலையில் மருத்துவமனையில் தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முயன்றது தெரிய வந்தது.

ஆனால் அது சாத்தியமில்லை என்று தெரிந்ததும், கணவனை சுட்டு விட்டு, கணவனுடன் சேர்ந்து வாழ்க்கையை முடிக்க மனைவி தன்னைத்தானே சுட்டுக் கொள்ள முடிவு செய்தாள். 

கடந்த மூன்று வாரங்களுக்கு முன் கணவன் மனைவிக்கு இடையே இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவரை துப்பாக்கியால் சுட்ட மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். அத்துடன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

#கோவை: எல்லாமே யூடியூப் சேனலில் பதிவிட்ட இளைஞருக்கு ஏற்பட்ட விபரீதம்..!

Mon Jan 23 , 2023
கோவை குனியமுத்தூரைச் சேர்ந்தவர் சுஹைல் (29). அவரது மனைவி பபினா (28), சுஹைல் விளகர் மற்றும் சைபர் தமிழா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை உள்ளது. குடும்பம் யூடியூப் வீடியோக்களில் இருந்து பணம் சம்பாதித்து, அதை தங்கள் சொந்த வீட்டைக் கட்ட பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்கள் YouTube சந்தாதாரர்களுடன் வீடியோக்களைப் பகிர்வதன் மூலம் ஒவ்வொரு நிகழ்வையும் கொண்டாடி வருகின்றனர். அவர்களது கனவு […]
Screenshot 2023 01 23 18 36 29 53 a71c66a550bc09ef2792e9ddf4b16f7a

You May Like