இந்தியாவை ஆட்டிப்படைக்கும் புதிய வைரஸ் காய்ச்சல்.. என்னென்ன அறிகுறிகள்..? என்ன சிகிச்சை..?

இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது.. நாட்டின் பல்வேறு நகரங்களில் காய்ச்சல் பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.. இந்த காய்ச்சல் நோயாளிகளுக்கு, இரண்டு வாரங்களுக்கு நீடித்த இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பதாக கூறப்படுகிறது.. குறிப்பாக டெல்லி, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வழகின்றன..

’மக்களே உஷார்’..!! ’மழைக்காலங்களில் வேகமாக பரவும் நோய்கள்’..!! ’தப்பிக்க இதுதான் ஒரே வழி’..!!

இந்த காய்ச்சலுக்கு இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் H3N2 மாறுபாடு தான் காரணம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களாக H3N2 பரவல் அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தரவுகள் காட்டுகின்றன.. இந்த இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் A, B, C, மற்றும் D என நான்கு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா A, B மற்றும் C ஆகியவற்றால் தான் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.. இருப்பினும், இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B மட்டுமே, அதிகமானோருக்கு ஏற்படுகிறது..

அனைத்து இன்ஃப்ளூயன்ஸா நோய்த்தொற்றுகளில் 75% இன்ஃப்ளூயன்ஸா A நோய்த்தொற்றுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 25% இன்ஃப்ளூயன்ஸா B தொற்று காரணமாக உள்ளது. இன்ஃப்ளூயன்ஸா A மற்றும் B இரண்டும் வேகமாக பரவும் தொற்றுநோயாகும்.. இதில் ஏதேனும் ஒரு வகை வைரஸால் ஒரு நபர் பாதிக்கப்பட்டால், அவர் இருமும் போது அல்லது தும்மும் போது வைரஸை 6 அடி தூரம் வரை பரப்பலாம். வைரஸால் பாதிக்கப்பட்ட மேற்பரப்பை தொட்டுவிட்டு, உங்கள் மூக்கு அல்லது வாயை தொடுவதன் மூலம் நீங்கள் வைரஸைப் பெறலாம்.

சமீப காலங்களில், இன்ஃப்ளூயன்ஸா A (H3N2) வைரஸ்கள் மற்ற வயதினரைக் காட்டிலும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், நீரிழிவு, ஆஸ்துமா மற்றும் இதய நோய் போன்ற நோய்களுடன் கூடிய 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் அதிக ஆபத்தில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்..

இன்ஃப்ளூயன்ஸா A வைரஸின் அறிகுறிகள்:

  • இருமல்
  • மூக்கு ஒழுகுதல் அல்லது
  • மூக்கடைப்பு
  • தொண்டை வலி
  • தலைவலி
  • உடல் வலிகள் மற்றும் கை, கால் வலி
  • காய்ச்சல்
  • வயிற்றுப்போக்கு

எப்படி தடுப்பது..?

  • ஒவ்வொரு ஆண்டும், காய்ச்சல் தடுப்பூசி பெறவும். சாத்தியமானால், அக்டோபர் இறுதிக்குள் அதைப் பெற முயற்சிக்கவும்.
  • கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்
  • வைரஸ் விரைவில் பரவக்கூடிய நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்
  • நோய்வாய்ப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்கவும்.
  • உங்களுக்கு காய்ச்சல் இருந்தால், உங்கள் காய்ச்சல் குறையும் வரை வீட்டிலேயே தங்கி, இருமல் அல்லது தும்மும்போது வாயை மூடிக்கொண்டு மற்றவர்களுக்கு பரவுவதைத் தவிர்க்கலாம்.

என்ன சிகிச்சை : நோயாளிகள் தங்கள் நிலை மோசமடைகிறதா என்பதைக் கண்டறிய தங்களைக் கண்காணித்து மருத்துவ உதவியை நாட வேண்டும். கடுமையான அல்லது சிக்கலான நோயை உருவாக்கும் அதிக ஆபத்தில் உள்ள நோயாளிகள், விரைவில் வைரஸ் தடுப்பு மருந்துகளுடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். சிகிச்சையானது குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது, ஆனால் திருப்திகரமான மருத்துவ முன்னேற்றம் இருக்கும் வரை நீட்டிக்கப்படலாம்.

RUPA

Next Post

இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம்...! யார் யாரெல்லாம் இதில் பங்கேற்கலாம்...? முழு விவரம்

Sat Mar 4 , 2023
படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் […]
college students

You May Like