“நான் சொன்னா குடிக்க மாட்டியா…..”! கோபத்தில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கணவன்!

உத்திர பிரதேச மாநிலத்தில் மனைவி மது குடிக்காததால் கணவர் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி வைத்துக் கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவை சார்ந்தவர் யுத்வேந்திரா இவருக்கும் வினிதா என்ற பெண்ணிற்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யுத்வேந்திரா மது பழக்கத்திற்கு அடிமையானவர். அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியை துன்புறுத்தி இருக்கிறார்.


மேலும் மனைவியிடமும் குடிக்க சொல்லி வலியுறுத்தி அடிக்கடி பிரச்சனை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று குடித்துவிட்டு வந்த யுத்வேந்திரா தனது மனைவியிடமும் குடிக்க சொல்லி தகராறு செய்து இருக்கிறார். இதற்கு அவர் மறுத்துள்ளதால் கோபத்தில் தனது மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து இருக்கிறார். இதில் உடல் எல்லாம் வெந்து படுகாயமடைந்த அவரது மனைவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது மனைவி தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் மீது சொந்த கணவனே தீவைத்துக் கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

1newsnationuser5

Next Post

"ப்ளாட் பாரத்தில் அம்மாவுடன் தூங்கிய 3 வயது குழந்தை....."! பிஞ்சு குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்த காமக்கொடூரன் கைது!

Tue Mar 7 , 2023
மும்பையில் ரயில் நிலையத்தில் இருந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நவி மும்பையில் உள்ள பன்வல் ரயில்வே ஸ்டேஷனில் தான் இந்தக் கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அந்த ரயில்வே நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த மூன்று வயது குழந்தையை அப்பகுதியில் குப்பைகளை பொறுக்கும் ஒரு நபர் தூக்கிச் சென்று ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் வைத்து குழந்தையை […]
IMG 20230307 WA0071

You May Like