அண்ணாமலையை தேர்தல் பொறுப்பாளரான நியமிப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் மதுரையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பாஜக சார்பில் வியூகம் தீட்டும் வேலைகள் முழுசாக துவங்கிவிட்டன. இதன் தொடக்கமாக, மதுரையில் இன்று (ஜூன் 8) மாலை ஒத்தக்கடை வேலம்மாள் திடலில் நடைபெறும் பிரமாண்ட ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக கலந்து கொண்டு, எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெறும் வழிமுறைகள், திட்டங்கள், வாக்காளர் அணுகுமுறை உள்ளிட்ட முக்கியக் கோட்பாடுகளை மாநில பாஜக தலைமைக்கு விளக்கவுள்ளார்.
மதுரையைத் தேர்தல் வியூகம் தொடங்கும் இடமாக தேர்வு செய்திருப்பது பல்வேறு அரசியல் அர்த்தங்களை உருவாக்கியுள்ளது. தென் மாவட்டங்களில் பாஜக தனது அடிப்படை வாக்காளர்ச் செல்வாக்கை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த கூட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலையை நியமிபது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமித்ஷா தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக மா நில தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனீவாசன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மேலும் மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறும் முருகன் மாநாடு குறித்து மையக்குழுவில் ஆலோசனை உள்ளது. தொடர்ந்து அதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து ஆளுங்கட்சியிக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்க அறிவுறுத்தப்பட உள்ளது. தமிழக பாஜக பூத் கமிட்டி நிர்வாகிகள் பட்டியலை ஜூலை இறுதிக்குள் புதுப்பித்து மாநிலத் தலைமையிடம் வழங்க மையக்குழுவில் அறிவுறுத்தப்பட உள்ளது.
Read more: சீனாவில் ட்ரெண்டாகும் கட்டிப்பிடி வைத்தியம்.. 5 நிமிடத்திற்கு ரூ.600..!! ஆனா இது புதுசா இருக்குண்ணே…