குஷி..! மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பிக்க 10,000 இடங்களில் சிறப்பு முகாம்…! வெளியான சூப்பர் அறிவிப்பு…!

1000 2025 1

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்க ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.


தூத்துக்குடி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்ட, தகுதியுள்ள பெண்கள் ஜூலை 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்காக, ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. தகுதியுள்ள பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கடைகளில் கைரேகை வைக்க வேண்டும், கருவிழி பதிவு செய்ய வேண்டும் என்பது, மத்திய அரசு தமிழகத்துக்கு கொடுக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும்.

மத்திய அரசின் திட்டம் மூலம் பணம் பெறும் அனைத்துக்கும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நடைமுறையால் தான் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனித்தனியாக நலவாரியங்கள் உள்ளன. இதில் இதுவரை பதிவு செய்யாத தொழிலாளர்கள் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. நலவாரிய உறுப்பினர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன என்றார்.

Read more: அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்!. இன்று உலக அகதிகள் தினம்!

Vignesh

Next Post

உஷார்!. பேரீச்சம்பழத்தில் மறைந்திருக்கும் ஆபத்து!. நிபுணர்கள் எச்சரிக்கை!.

Tue Jun 24 , 2025
பேரீச்சம்பழம் அல்லது கஜூர் என்று பிரபலமாக அழைக்கப்படும் பேரீச்சம்பழம், உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு சிறந்த உணவுகளில் ஒன்றாகும். நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பல அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்த பேரீச்சம்பழம், செரிமானம், இருதய ஆரோக்கியம் மற்றும் எடை இழப்புக்கு கூட சிறந்தது. மருத்துவர்கள் தினமும் இரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட அறிவுறுத்தினாலும், அதனுடன் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. நீங்கள் பேரீச்சம்பழத்தை விதை அகற்றிய பின்பு அதன் உள்ளே உள்ளதை […]
dates 11zon

You May Like