Alert: தீவிரப் புயலாக வலுப்பெறும் ’மோன்தா’… மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று…!

cyclone rain 2025

மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா புயல்’ இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இன்றிரவு காக்கிநாடா அருகே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசலாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று நள்ளிரவில் ‘மோந்தா’ புயலாக வலுப்பெற்று, தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது. இது சென்னையிலிருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 420 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 470 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை தீவிரப்புயலாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடலோரப்பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்துக்கு இடையே, காக்கிநாடாவுக்கு அருகில் தீவிரப்புயலாக இன்று இரவில் கரையைக்கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் கனமுதல் மிக கனமழையும் சென்னை, செங்கை, காஞ்சிபுரம் ,ராணிப் பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘மோன்தா புயல்’ இன்று காலை தீவிர புயலாக வலுப்பெறுகிறது. இன்றிரவு காக்கிநாடா அருகே தீவிரப் புயலாகவே கரையைக் கடக்கும். அப்போது, அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசலாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Vignesh

Next Post

வொர்க் அவுட் முடித்தவுடன் இப்படி தண்ணீர் குடித்தால் ஆபத்து..!! இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார்..!!

Tue Oct 28 , 2025
உடல் ஆரோக்கியமாகவும் ஃபிட்னஸுடனும் இருக்க, உடலின் நீர்ச்சத்து சரியான அளவில் இருப்பது அவசியம். ஆனால், உடற்பயிற்சிக் கூடங்களில் நாம் செய்யும் ஒரு பொதுவான தவறு, வொர்க் அவுட் செய்து முடித்த உடனேயே வேகமாகத் தண்ணீர் குடிப்பதுதான். உடற்பயிற்சிக்குப் பிறகு நமது உடல் தீவிரமான செயல்பாட்டிலிருந்து மீண்டு தன்னைச் சரிசெய்யும் பணியில் இருக்கும். அப்போது, இதயத் துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் இயல்பாக அதிகமாக இருக்கும். ரத்த ஓட்டம் தசைகளுக்கு அதிக […]
Water 2025

You May Like