தமிழகத்தில் மட்டும் இந்த இழிநிலை .. குற்றவாளிகளுக்கு எப்படி பயம் வரும்..? ஸ்டாலின் அரசை சாடிய அண்ணாமலை..!

Annamalai Vs Stalin Updatenews360 1

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.. ஒருபுறம் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.. மறுபுறம் ஆளுங்கட்சியான திமுக மீதான விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன..


இந்த நிலையில் சென்னை அரசுக் கல்லூரியில் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சென்னை அரசு கலைக்கல்லூரியில், கேண்டீனில் பணிபுரியும் 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தொடர்ந்து, பெண்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வி நிலையங்களில் கூட பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது, மிகவும் அச்சத்தை அளிக்கிறது.

முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் மேடையேறி, தமிழகம் பெண்களுக்குப் பாதுகாப்பாக இருக்கிறது என்று எத்தனை பொய்கள் சொன்னாலும், உண்மை நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது என்பதை, தினமும் நாம் காணும் இது போன்ற செய்திகள் நிரூபிக்கின்றன.

முதலில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்ற கடினமான உண்மையை திமுக அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான், அதற்கேற்ற நடவடிக்கைகளை திட்டமிட முடியும். அதை விடுத்து, ஒரு மாய உலகத்தில் அமர்ந்து கொண்டு, யாரோ எழுதிக் கொடுப்பதை அப்படியே ஒப்பித்துச் செல்வதல்ல முதலமைச்சரின் பணி. கட்டுக்கடங்காத போதைப் பொருள்கள் புழக்கம், சமூகத்தில் மிகப் பெரிய அவலத்தை ஏற்படுத்தியிருப்பது, பெருகி வரும் பாலியல் குற்றங்களால் வெளிப்படையாகியிருக்கிறது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் என, திமுக அரசின் கையாலாகாத்தனம், அமைதியான நம் தமிழகத்தை முற்றிலுமாக சிதைத்திருக்கிறது. குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால்தான், மேலும் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். ஆனால், தமிழகத்தில் மட்டும்தான், குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திமுக அமைச்சர்களுடன் கட்டிப்பிடித்தபடி போட்டோ எடுத்துக் கொள்ளும் இழிநிலை இருக்கிறது. அந்தக் குற்றவாளிகளைக் காப்பாற்ற, எந்த எல்லைக்கும் செல்கிறது திமுக அரசு. பிறகு எப்படி குற்றம் செய்பவர்களுக்குப் பயம் வரும்? சாதாரண பொதுமக்களுக்குத்தான் பயம் வருகிறது. திமுக ஆட்சியின் இருண்ட காலம், இன்னும் சில நாட்களில் முடிந்து விடும் என்ற ஒரே நம்பிக்கைதான், தமிழக மக்களுக்கு தற்போது நிம்மதி அளிக்கும் ஒரே விஷயம்.” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : ஜவுளி நிறுவனங்கள் அதிநவீன இயந்திரங்கள் வாங்க 20% மானியம் வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு..!

RUPA

Next Post

முழு அரசு மரியாதை உடன் அஜித் பவார் உடல் தகனம்..! கண்ணீர் மல்க விடை கொடுத்த குடும்பத்தினர், ஆதரவாளர்கள்..!

Thu Jan 29 , 2026
மகாராஷ்டிர துணை முதலமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் பவாரின் உடல் வியாழக்கிழமை அன்று பாராமதியில் உள்ள வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது… அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான துக்கமடைந்த மக்கள் அந்த மூத்த தலைவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் […]
ajit pawar last rites

You May Like