ஓமன் கடற்கரைக்கு அருகே இந்தியப் பணியாளர்கள் கொண்ட மற்றொரு கப்பல் தாக்கப்பட்டதாக வெளியான செய்திகளை மத்திய அரசு நிராகரித்துள்ளது.. அவை தவறான செய்திகள் எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது..
மார்ஷல் தீவுகள் கொடியை ஏந்திய எண்ணெய் மற்றும் இரசாயனக் கப்பலான எம்.டி. லியாக்கி ஃப்ரீடம், வி.எச்.எஃப் (மிக உயர் அதிர்வெண்) அலைவரிசையில் பதிலளிப்பதை நிறுத்திய பின்னர், வெள்ளிக்கிழமை இரவு ஓமன் வளைகுடாவில் குறிவைக்கப்பட்டதாக, சரிபார்க்கப்படாத பல செய்திகள் கூறின.
அந்தக் கப்பலில் பல இந்தியர்கள் இருந்ததாகவும், உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் என அஞ்சப்படுவதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இருப்பினும், அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகக் கூறி, இந்திய அரசாங்கம் அந்தச் செய்திகளை மறுத்துள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் “ லியாக்கி ஃப்ரீடம் கப்பலின் மாஸ்டரிடம் நாங்கள் பேசினோம். அனைத்துப் பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், வெளியான தகவல் பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஓமன் கடற்கரைக்கு அருகில் இந்தியப் பணியாளர்கள் கொண்ட 3 கப்பல்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. ஜூன் 8 அன்று, எம்.டி. மரிவெக்ஸ் கப்பல் குறிவைக்கப்பட்டது. பலாவ் கொடியை ஏந்திய அந்த எண்ணெய்க் கப்பலில் 24 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர். அவர்கள் ஓமன் அதிகாரிகளால் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஜூன் 10 அன்று, பலாவ் கொடியை ஏந்திய மற்றொரு எண்ணெய்க் கப்பலான எம்.டி. செட்டபெல்லோவும், அதில் 24 இந்தியப் பணியாளர்கள் இருந்தனர், குறிவைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் மூன்று மாலுமிகள் உயிரிழந்தனர். மேலும், ஜூன் 11 அன்று, கினியா-பிசாவ் கொடியை ஏந்திய எண்ணெய்க் கப்பலான எம்.டி. ஜல்வீர், அதில் 20 இந்திய மாலுமிகள் இருந்தனர், குறிவைக்கப்பட்டது, ஆனால் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..



