கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) மாநிலச் செயலாளர் பெ .சண்முகம் விரைவில் தேர்தல் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் தெரிய வருகிறது என கூறினார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தவெக-விற்கு வாக்களித்து புதிய அரசைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஆனால், தங்களால் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் இருப்பதை திமுகவால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தற்போதைய முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியை கவிழ்த்துவிட்டு, மீண்டும் அரியணை அமைக்க திமுக துடிக்கிறது.தவேக சட்டமன்ற உறுப்பினர்களை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலை பேசி வாங்குவதை ஏற்க முடியாது.இந்த சட்டவிரோத செயல்களுக்குப் பின்னால் யார் இருந்தாலும், அவர்கள் மீது அரசு உடனடியாகவும் மிகக் கடுமையான முறையிலும் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் தேர்தல் என ஸ்டாலின் பேசியதன் பின்னணி இப்போது தான் தெரிய வருகிறது என்று கூறினார்.
Also Read:ஸ்டாலினுக்காக திருவாரூர் தொகுதி எம்எல்ஏ ராஜினாமா ?இடைத்தேர்தல் குறித்து பரவும் தகவல் என்ன?



