நேபாள பேரழிவு..!! பிரதமர் மோடி சொன்ன அந்த வார்த்தை..!! கைகோர்க்கும் இந்திய மீட்புக் குழு..!!

Modi 2026 1

நேபாளத்தில் கோஷி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா முழு தயார் நிலையில் உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.


இதுகுறித்து நேபாள பிரதமர் பாலேந்திர ஷாவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடிய பிரதமர் மோடி, வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார். இந்த இக்கட்டான பேரிடர் காலகட்டத்தில், நேபாளத்தின் சகோதர, சகோதரிகளுக்குத் துணை நிற்பதில் இந்திய மக்கள் எப்போதும் உறுதியாக இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நேபாளத்திற்குத் தேவையான அவசரகால நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்க இந்தியா எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் என்றும், களத்தில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியக் குழுவினர் நேபாள அதிகாரிகளுடன் இணைந்து முழுவீச்சில் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read More : Nepal Floods | நேபாள பெருவெள்ளத்தில் 57 தமிழர்கள் சிக்கித் தவிப்பு..!! பீகார் மாநிலத்துக்கும் உச்சக்கட்ட அலர்ட்..!! பதறவைக்கும் காட்சிகள்..!!

Next Post

பீகார், உ.பி. மாநிலங்களை நெருங்கும் நேபாள பெருவெள்ளம்..!! மத்திய அரசு 'ஹை அலர்ட்'..!!

Wed Aug 26 , 2026
நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் கோர வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், நீர்மின் நிலையங்கள், சோலார் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இமயமலையில் உருவாகி நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் கங்கையின் கிளை நதிகளான கோஷி மற்றும் கண்டக் (நாராயணி) ஆறுகளில் வெள்ளநீர் அபாய அளவைத் தாண்டிப் பெருக்கெடுத்து வருவதால், அண்டை […]
Nepal 1

You May Like