அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் உடனடியாக புறப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசியல் சூழலை கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இடையே நடைபெற்ற ஒரு எதிர்பாராத சந்திப்பு தற்போது அரசியல் களத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள அண்ணாமலையின் தனி இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்து, இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு சாதாரண நட்பு சந்திப்பல்ல, மாறாக, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட ஆலோசனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுவதால் அதன் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அண்ணாமலை சமீபத்தில் பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்; மறுபுறம் டிடிவி தினகரன் புதிய கூட்டணித் திட்டங்கள் மற்றும் தனித்து செயல்படும் அரசியல் நிலையை வலுப்படுத்த முயற்சி செய்து வருகிறார்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு, பாஜக–அதிமுக இடையேயான சுமூகமான போக்கு ஏற்படவில்லை. 2026 தேர்தலுக்கான கணக்கீடுகள் மற்றும் வடதமிழக, மேற்கு தமிழகம் ஆகிய பகுதிகளில் வாக்கு வங்கிகளை எப்படி ஒருங்கிணைக்கலாம் போன்ற ஆலோசனையில் கட்சி ஈடுபட்டு வருகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு கோவையில் உள்ள தனது வீட்டில் இரவு விருந்து அளித்த பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் ஆலோசனை நடத்தியதாகவும், விருந்தின் இடையிலேயே அண்ணாமலைக்கு டெல்லியில் இருந்து அவசர அழைப்பு வந்ததால் உடனடியாக புறப்பட்டு சென்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



