அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை, வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி மதுரையில் முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.
முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதியே இத்திட்டம் தொடங்கப்படுவதாக முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும், முதல்வர் விஜயின் வெளிநாட்டுப் பயணம் காரணமாக திட்ட தொடக்க நிகழ்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வரும் செப்டம்பர் 25 அன்று மதுரையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதல்வர் விஜய் இத்திட்டத்தை தொடங்கி வைப்பார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதேபோல், பள்ளிக் குழந்தைகளுக்கான ‘காமராஜர் காலை உணவுத் திட்டத்தை’ செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளார்.
அதேசமயம், சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய செங்கல்பட்டு, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களில் மட்டும் இந்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தற்போது செயல்பாட்டுக்கு வராது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.


