இதை மட்டும் சேருங்க, சாதாரண தோசையை சத்தான தோசையா மாற்றலாம் – பிரபல மருத்துவர் டிப்ஸ்!

Dosa 2026

பொதுவாக தமிழ்நாட்டில் காலை அல்லது இரவு உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது இட்லி, தோசை தான். இதில் இட்லி சிலருக்கு அதிகம் விருப்பமில்லை என்றும், உடல்நிலை சரியில்லாத போது மட்டும் சாப்பிடும் உணவாகவே பலர் கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலான வீடுகளில் தோசை தான் அதிகமாக தயாரிக்கப்படுகிறது. தோசை பிடிக்காதவர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பிரபலமான உணவாக இது உள்ளது.


ஆனால், தோசையில் அதிகளவில் ஊட்டச்சத்து இருப்பதில்லை என்றும், பெரும்பாலும் கார்போஹைட்ரேட் மட்டுமே நிறைந்த உணவாகவே உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் தினசரி உணவில் இதை சத்துள்ளதாக மாற்ற வேண்டும் என்ற கருத்தும் நிபுணர்களால் முன்வைக்கப்படுகிறது. இந்நிலையில், தோசையை சத்தான உணவாக மாற்ற ஒரு எளிய முறையை பிரபல மருத்துவர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த தகவலின் படி, சாதாரண தோசையை விட முட்டை தோசை சாப்பிடுவது உடல்நலத்திற்கு சிறந்ததாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த இரண்டு உணவுகளும் தோசை மாவிலிருந்து தயாரிக்கப்படுகின்றன என்றாலும், முட்டை சேர்க்கப்படும் போது அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிப்பதாக அவர் விளக்கியுள்ளார். இதற்கு பலரும் “இரண்டும் ஒரே மாவுதானே, என்ன வித்தியாசம்?” என்று கேட்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவரின் விளக்கப்படி, முட்டை என்பது கிளைசீமிக் தாக்கம் இல்லாத உணவாகும். அதனால் ரத்த சர்க்கரை அளவு திடீரென உயர்வதை இது தடுக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது. அரிசி மாவுடன் முட்டை சேர்க்கப்படும் போது, கார்போஹைட்ரேட் உறிஞ்சும் வேகம் குறைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், முட்டை புரதமும் கொழுப்பும் நிறைந்ததால் நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் தேவையற்ற இடைவேளை சிற்றுண்டி உணவுகளை தவிர்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு நாளைக்கு முட்டை எவ்வளவு சாப்பிடலாம் என்பது குறித்து அவர் கூறுகையில், பெரும்பாலானோர் 2 முதல் 3 முட்டைகள் வரை சாப்பிடுவது பொதுவாக பாதுகாப்பானது என தெரிவிக்கப்படுகிறது. கொலஸ்ட்ரால் குறித்து அதிகமாக அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக அளவில் முட்டை எடுத்துக்கொள்வதை வழக்கமாகக் கொண்டாலும், சாதாரண நபர்கள் மிதமான அளவில் எடுத்துக்கொண்டால் போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட அளவோடு முழு முட்டை எடுத்துக்கொள்ளலாம் என்றும், அது ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு உதவக்கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும், முட்டையை பல்வேறு வகைகளில் உணவில் சேர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. உதாரணமாக, தோசை மாவுடன் சேர்த்து முட்டை தோசையாக சாப்பிடலாம். அதேபோல், ரொட்டியுடன் சேர்த்து முட்டை ஆம்லெட் எடுத்துக்கொள்வதும் நல்ல தேர்வாக இருக்கும்.

முட்டை கிடைக்காத சூழ்நிலையில், வேகவைத்த முட்டையுடன் பழங்களை சேர்த்து ஒரு முழுமையான காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். மொத்தத்தில், உணவில் கார்போஹைட்ரேட்டுடன் புரதம் மற்றும் கொழுப்பு சேர்க்கப்படும் போது ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் நோய்களை கட்டுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Also Read: 45 நாட்கள் இந்த பழம் சாப்பிடுங்க; உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்தும் கிடைத்துவிடும்!

Saranya

You May Like