விருதுநகர் மாவட்டத்தில் 15 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஜோதிடருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கிய தீர்ப்பளித்து இருக்கிறது. விருதுநகர் போக்சோ நீதிமன்றம் 2020 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று தீர்ப்பளித்து வழங்கிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் காலங்காப்பேரி சாலையைச் சார்ந்தவர் ஜோதிடர் பழனிச்சாமி இவருக்கு வயது 63. இவர் அந்த பகுதியைச் சார்ந்த 15 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் 2020 ஆம் ஆண்டு ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜோதிடர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை செய்து ஜோதிடர் பழனிச்சாமியை கைது செய்தனர்.
சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த ஜோதிடர் பழனிச்சாமியின் மீது பொக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுதூர் பொக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்.
அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஜோதிடர் பழனிச்சாமியின் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு இருபது ஆண்டுகள் சிறை தண்டனையும் பன்னிரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்திருக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 6 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.