கண்ணை மறைத்த காதல்.. விஷம் குடித்து சிறுமியுடன் தற்கொலை முயற்சி.! மரணித்த சிறுமி.. தப்பித்த இளைஞர்.!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எரண்டப்பள்ளி கிராம பகுதியை சேர்ந்தவர் சௌந்தர்ராஜன். இவர் கர்நாடக பகுதியின் குருபரஹள்ளி கிராமத்தை சேர்ந்த உறவினரின் பெண்ணான அனுஸ்ரீ என்ற 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியுடன் பழகி வந்துள்ளார்.


சிறிது நாட்களிலே இருவரும் காதலித்துள்ளனர். மேலும், இவரது காதல் பற்றி மாணவியின் வீட்டில் பெற்றோர்களுக்கு தெரிய வந்துள்ள நிலையில் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 10 நாட்களுக்கு முன்பு சௌந்தர்ராஜன் தன்னுடைய காதலியான அனு ஶ்ரீயை அவரது வீட்டிற்கு கூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில், சென்ற 26 ஆம் தேதி எரண்டப் பள்ளி என்ற கிராமத்தில் இவர் இருவருமே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களை அருகில் இருந்தவர் பார்த்து உடனடியாக இருவரையும் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அனுஸ்ரீ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், அந்த வாலிபர் அதே அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். 9 ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1newsnationuser5

Next Post

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது எவ்வளவு தெரியுமா?

Thu Nov 3 , 2022
தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.37,720-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 26 ரூபாய் குறைந்து, ரூ.4,715-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 64,500 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் குறைந்து, […]
ஆபரணத் தங்கம்

You May Like