ஒடிசா ரயில் விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த பயணிகளுடன், சிறப்பு ரயில் காலை 4.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தது. ஒடிசாவில் சரக்கு ரயில் மீது மோதியதால் கொல்கத்தாவில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்துள்ளனர். 1000-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்தோர், காயமடைந்தோரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் யாரும் […]

ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 280க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர்‌. மேலும்‌ 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம்‌ அடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. தற்பொழுது விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் […]

தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்று மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ ஆகிய பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ இடிமின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்‌ கூடும்‌. மேலும்‌, வரும் ஜூன்‌ 6 மற்றும்‌ 7-ம்‌ தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில் ஓரிரு இடங்களில்‌ லேசானது […]

பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன், உடல் குறைவு காரணமாக காலமானார். பிரபல நாடக நடிகரும் இயக்குனருமான அமீர் ராசா ஹுசைன், உடல் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. 1974 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேஜிடூர் நாடக நிறுவனத்தின் கிரியேட்டிவ் டைரக்டராக தனது பணியை தொடங்கிய இவர் 91 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மற்றும் 1,100 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி‌ உள்ளார். லக்னோவில் […]

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மாத வருமானத்தை மத்திய, மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என நடிகர் சோனு சூட் வலியுறுத்தியுள்ளார். ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னைநோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 280க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர்‌. மேலும்‌ 700க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. ரயில் விபத்தில் சிக்கி […]

பல்கலைக்கழக மானியக்குழு விதி 2023-ஐ மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். தேசியக்கல்விக்கொள்கை 2020வுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தொடர்ச்சியாக மூன்று பருவங்களுக்கு என்ஏஏசி “ஏ” தரத்துடன் 3.01 சிஜிபிஏ பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் சிறப்புப் பிரிவில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 50 இடங்களுக்குள் இடம்பெற்றிருக்க வேண்டும் அல்லது என்ஐஆர்ஃஎப்-என் ஒட்டுமொத்த தரவரிசையில் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்கு முதல் 100 இடங்களுக்குள் வந்திருக்க வேண்டும். […]

வங்கி மோசடி வழக்கில் பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ செந்தில் குமாருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், தனசேகர், கருணாநிதி (எஸ்ஜெஎஸ் நிறுவனத்தின் இயக்குநர்கள்) மற்றும் ஜெ முரளி, பி லதாபாஸ், செந்தில்குமார் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. […]

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பெயரில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் தலைமையில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் ஒடிசா செல்ல உள்ளனர். கொல்கத்தாவில்‌ இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ விரைவு ரயில்‌, ஒடிசா மாநிலம்‌ பாஹனாகநகர்‌ அருகே விபத்துக்குள்ளானதில்‌ 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விபத்தில்‌ 900-க்கும்‌ மேற்பட்டவர்கள்‌ படுகாயம்‌ அடைந்த நிலையில்‌ மருத்துவமனையில்‌ தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்‌. விபத்தில் சிக்கியவர்களுக்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு வழங்கும் என […]

ஒடிசா ரயில் விபத்து காரணமாக கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசா ரயில் விபத்து காரணமாக இன்று நடைபெற இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரயில் விபத்து காரணமாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மற்றும் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டுமே நடைபெறும் என […]

கோரமண்டல்‌ விரைவு ரயில் விபத்துக்குள்ளானதை அடுத்து 18 தொலைதூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று மாலை நடந்த பயங்கரமான மூன்று ரயில் விபத்தைத் தொடர்ந்து 18 தொலை தூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். ஏழு ரயில்கள் டாடாநகர் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் படி, 12837 ஹவுரா-பூரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், 12863 ஹவுரா-பெங்களூரு சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் 12839 […]