சேலத்தை சேர்ந்த பசுமை தாயகத்தின் மாநில இணைச் செயலாளர் சத்ரியசேகர் அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் இன்னும் முழுமையாக ஓயவில்லை. கடந்தாண்டு நடந்த சிறப்புப் பொதுக்குழுவில், பாமக இளைஞர் சங்கத் தலைவராக தனது பேரன் முகுந்தனை ராமதாஸ் நியமித்தார். ஆனால், மேடையில் வைத்தே அதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதுதான் பிரச்சனையில் ஆரம்ப புள்ளி. பின்னர், இதைத்தொடர்ந்து பாமகவில் அவ்வப்போது […]

ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க உரிய அரசாணையை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை அளித்துள்ளது.  திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனக்கு சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கும்படி திருப்பத்தூர் தாசில்தாருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், தனது குழந்தைகளுக்கு சாதி மற்றும் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் எந்தச் […]

சீனாவின் ‘காவோகாவோ’ (Gaokao) எனப்படும் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. நாட்டின் கல்வி எதிர்காலத்தை தீர்மானிக்கும் இத்தேர்வில், 13.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இத்தேர்வுகளின் நேர்மையைக் காக்கும் முயற்சியாக, அலிபாபா, டென்சென்ட், பைட் டான்ஸ் போன்ற முன்னணி சீன தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களுடைய AI (Artificial Intelligence) அம்சங்களைத் தற்காலிகமாக முடக்கியுள்ளன. AI-க்கு தடை: சீனாவில் நடைபெறும் முக்கியமான பல்கலைக்கழக […]

திமுகவை சேர்ந்த ஆண்டிப்பட்டி எம் எல் ஏ மகாராஜன் மகளிர் இலவச பேருந்தை பெண்களின் ஓசி பஸ் எனக் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பணிபுரியும் மகளிர், உயர் […]

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கோவிட் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்களின்படி, இன்று வரை கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7121 ஐ எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 306 புதிய வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. இன்று ஆறு இறப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளன. கேரளாவில் 2223 கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

மலையாள சூப்பர் ஸ்டார் ஆன மம்முட்டியின் மாமனார் அபு (90) தற்போது உடல்நலக் குறைவினால் காலமானார். நடிகர் மம்மூட்டி மலையாள சினிமாவில் மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவில் புகழ் பெற்ற மூத்த நடிகராக உள்ளார். மம்முட்டி 1979-ல் வெளியான வில்கானுண்டு சொப்னங்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு வந்தார். சிறந்த நடிகருக்கான விருதினை தேசிய அளவில் மூன்று முறையும், மாநில அளவில் 20க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் மிக […]

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் NIACL -இல் 500 அப்பரெண்டீஸ் டிரெய்னிங் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியிடங்கள் விவரம்: நாடு முழுவதும் அப்ரண்டீஸ் டிரெய்னிங் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 500 பணியிடங்கள் ஆகும். கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்து இருந்தால் விண்ணப்பிக்க முடியும். வயது வரம்பு: வயது வரம்பை பொறுத்தவரை 21 வயது நிரம்பியவர்களும் 30 […]

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் தற்போது போராட்டங்கள், வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதனால்தான் அமெரிக்க அரசாங்கம் நாட்டில் தேசிய காவலர்களை நிறுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உட்பட பல மாநிலங்களில் வன்முறை போராட்டங்கள் காணப்படுகின்றன. மக்களின் கோபம் தெருக்களில் வெடித்து வாகனங்களுக்கு தீ வைத்துள்ளது. தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனால்தான் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படையை நிறுத்தியுள்ளார். இதனால்தான் […]

நாடு முழுவதும் கோவிட்-19 வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் அமைச்சர்கள் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஜூன் 11 ஆம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,000-ஐத் தாண்டிய நிலையில், தொற்று பரவல் குறித்து கவலை அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 306 புதிய கோவிட்-19 வழக்குகளும், ஆறு இறப்புகளும் […]