புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கான சேர்க்கை தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் ஏ. நமச்சிவாயம் கலந்துகொண்டு, மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணைகளை வழங்கிப் பேசினார். அப்போது பேசிய அமைச்சர் நமச்சிவாயம், பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வருவது போல, புதுச்சேரியில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் இலவசப் பேருந்து வசதியை ஏற்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். […]
ஓசூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நள்ளிரவில் உள்ளாடை மற்றும் முகமூடி அணிந்த மர்ம கும்பல் உலா வந்த அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காமராஜ் நகர் குடியிருப்புப் பகுதியில் 16-ஆம் தேதி அதிகாலை சுமார் 2.48 மணியளவில் மர்ம நபர்கள் சிலர் நுழைந்துள்ளனர். வெறும் உள்ளாடை மற்றும் முகமூடி மட்டுமே அணிந்திருந்த அந்தக் கும்பல், தெருக்களிலும் வீடுகளின் முன்புறமும் சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித் திரிந்து ஒவ்வொரு […]
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அமைச்சர் அருண்ராஜ் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்ட முக்கிய திட்டங்களின் விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம். ➣ தமிழகத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்கள் வருமான உச்சவரம்பு ஏதுமின்றி கட்டணமில்லா மருத்துவச் சிகிச்சைகள் பெறும் வகையில் “முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். ➣ அனைத்து மாவட்ட […]
தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பல தலைமுறைகளாக நடைமுறையில் இருந்து வந்த நிலவரி வசூலிக்கும் முறை, நடப்பு 1436-ஆம் பசலி ஆண்டு முதல் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அதிரடி முடிவின் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் நீண்டகால வரிச் சுமையிலிருந்தும், வருவாய்த் துறையின் தேவையற்ற நிர்வாக நடைமுறைகளிலிருந்தும் முழு விடுதலை […]
சட்டப்பேரவையில் முதலமைச்சருக்கு அளிக்க வேண்டிய மரியாதை மற்றும் சட்டமன்ற மாண்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு மூத்த உறுப்பினர்கள் கற்றுத்தர வேண்டும் என அமைச்சர் ரமேஷ் பேசியது அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, தவெக அமைச்சர் ரஞ்சித் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், அவையின் கண்ணியத்தை உறுப்பினர்கள் அனைவரும் […]
ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்ட புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளில் உலக சந்தையில் தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை தொட்டது. அமெரிக்க டாலரின் மீதான நம்பகத்தன்மை குறைந்ததன் விளைவாக, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களது கைவசமிருந்த அமெரிக்க அரசுப் பத்திரங்களை விற்றுத் தங்கத்தை பெருமளவில் இருப்பு வைக்கத் தொடங்கின. அந்த வகையில், இந்தியாவும் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் […]
புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் B12 உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிவப்பு இறைச்சிகளில் ஆட்டுக்கறி முக்கிய இடத்தை பிடிக்கிறது. சந்தைகளில் பொதுவாக வெள்ளாட்டுக்கறி மற்றும் செம்மறி ஆட்டுக்கறி என இரு வகைகள் கிடைக்கின்ற சூழலில், உடல் எடையை கட்டுப்படுத்த நினைப்பவர்களுக்கும் குறைந்த கொழுப்பு உணவை விரும்புபவர்களுக்கும் இந்த இரண்டிற்கும் இடையிலான ஊட்டச்சத்து வேறுபாடுகளை புரிந்துகொள்வது அவசியமாகிறது. வெள்ளாட்டுக்கறியை பொறுத்தவரை, அது ஒப்பீட்டளவில் குறைந்த கொழுப்பு மற்றும் குறைந்த கலோரிகளை […]
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான, பயன்பாடின்றி காலியாக கிடக்கும் நிலங்களை பயன்படுத்தி சூரிய மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தத் துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் இத்திட்டம் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரே இடத்தில் […]
கர்நாடக வனத்துறையால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கர்நாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஹனூர் தாலுக்காவில் உள்ள கிராமங்களை சேர்ந்த தமிழர்கள்அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகியோர் ஆகஸ்ட் 15ம் தேதி அதிகாலையில், காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், கர்நாடக மாநில வனத்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது. இந்தப் படுகொலையை வன்மையாக […]
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அரசு செயல்படுவதற்கு ஓராண்டு காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். சென்னையில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியை அண்ணாமலை தலைமை தாங்கி நடத்தினார். அப்போது பேசிய அண்ணாமலை, ஆகஸ்ட் மாதத்தைச் சுற்றுச்சூழல் மாதமாகக் கடைப்பிடித்து 20 லட்சம் மரக்கன்றுகளை நடும் […]

