தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் திமுகவை அமைப்பு ரீதியாகப் பலப்படுத்தும் நோக்கில், கட்சியில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள தலைமை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக வரும் 22-ஆம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது. தேர்தல் கள நிலவரங்கள், தோல்விக்கான காரணங்கள் மற்றும் மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு […]

டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்ட நிகழ்வின் போது வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது. சில வரிகள் மட்டுமே பாட வேண்டும் என பாடகர்களுக்கு காங்கிரஸ் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும், ஆனால் இசை குழுவினர் முழு பாடலையும் பாடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா, ராகுல் ஆகியோர் பாடலை நிறுத்துமாறு கையசைத்துள்ளனர். எனினும் பாடல் முழுமையாக பாடி முடிக்கப்பட்டது இது தொடர்பான […]

தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், வட கடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் […]

சென்னையில் கழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் வர்த்தினி என்பவர் தமிழக டி.ஜி.பி.க்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், மனவேதனை அளிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். […]

சட்டப்பேரவையில் மக்கள் பிரதிநிதிகளின் களப்பணி மற்றும் பயண சிரமங்களைச் சுட்டிக்காட்டி வி.சி.க. சட்டமன்ற உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு சார்பில் கார் மற்றும் உதவியாளர் வழங்கும் திட்டத்தை அரசு பரிசீலித்து வருவதாக தலைமைச் செயலக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேசுகையில், தமக்கு சொந்தமாக வாகனம் இல்லாததால் 280 கி.மீ தொலைவிலிருந்து வாடகை வாகனங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் […]

ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கு பின்னால் பிரிட்டிஷ் சட்டம், வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயணத் திட்டம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. உண்மையில், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் […]

புதிய கார் வாங்கும்போதோ அல்லது இருக்கும் காரை மெருகேற்ற விரும்பும்போதோ, அலாய் வீல்களை (Alloy Wheels) தேர்ந்தெடுப்பதா அல்லது வழக்கமான ஸ்டீல் வீல்களையே (Steel Wheels) பயன்படுத்துவதா என்ற குழப்பம் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுவது இயல்பு. பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு செலவை குறைக்கும் நோக்கில் அடிப்படை மாடல்களில் ஸ்டீல் வீல்களையும், உயர் ரக மாடல்களில் கூடுதல் வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்காக அலாய் வீல்களையும் வழங்குகின்றன. இருப்பினும் […]

நாட்டின் 80-வது சுதந்திர தின விழா இன்று நாடெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதன்முறையாக தேசியக் கொடியை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்ற உள்ளார். ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து இந்தியா விடுதலை பெற்ற 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் குடியரசு தினத்தைப் போன்றே சுதந்திர தினத்திலும் […]

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமான மரபாக திகழ்கிறது. பல தசாப்த கால போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய இந்த வரலாற்று நாளுக்குப் பின்னால் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. […]

இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]