உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம், நாட்டையே பாதித்தது. ஆனால் அதைவிட வேதனையை அளிப்பது, அந்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னும் இழப்பீடு வழங்கப்படாதது என்ற செய்திதான். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வு ஜனவரி 12ஆம் தேதி […]
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) துணை நிறுவனமான AAICLAS நிறுவனத்தில் Security Screener (Freshers) பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தமாக 227 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சென்னையில் மட்டும் 176 இடங்கள் உள்ளது. என்னென்ன தகுதி? இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஏதேனும் ஒரு டிகிரி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம், இந்தி அல்லது உள்ளூர் மொழியை வாசிக்கவும், பேசவும் தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு: […]
குடியேற்றத்துக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லாரன் டோமாசி மீது ரப்பர் தோட்டாவால் போலீஸ் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் சட்டவிரோதமாகவும், முறையான ஆவணங்கள் இல்லாமலும் குடிபெயர்ந்தவர்களை நாடு கடத்தும் முயற்சியில் அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் தீவிரமாக இறங்கியுள்ளார். குடிபெயர்ந்தவர்களை கண்டறிந்து கைது செய்ய லாஸ் ஏஞ்சல்ஸில் தேசிய காவல்படை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. ட்ரம்பின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக அமெரிக்க மக்கள் […]
கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடன் வந்த கொள்கலன் கப்பலில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீப்பிடித்து எரியும் கப்பலில் இருந்து 18 பணியாளர்களை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையம், காலை 10:30 மணியளவில் கொச்சியில் உள்ள அதன் […]
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் பல புதிய கார்கள் வெளியிட தயாராக உள்ளது. சிறந்த டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக மைலேஜ் என பல அம்சங்களை உள்ளடக்கிய கார்களை விரைவில் சந்தையில் காணலாம். நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனெனில், இந்த புதிய கார்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் உருவாக்கப்படுகின்றன. தற்போது வரை, சுசுகி நிறுவனம் […]
தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? பூர்வீக சொத்தில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு..? இதைபற்றி சுருக்கமாக இங்கே நாம் தெரிந்து கொள்வோம். பூர்வீக சொத்து என்பது ஒருவரின் தந்தை சம்பாதிக்காத, மூதாதையர் முதலானவர்களிடமிருந்து வாரிசு வழியாக வரும் சொத்து. இது குறைந்தது நான்கு தலைமுறைகள் கடந்திருந்தால் மட்டுமே பூர்வீக சொத்தாக கருதப்படுகிறது. சுய சொத்து என்பது ஒருவர் தன்னுடைய சம்பாதிப்பில் இருந்து தனக்காக வாங்கிய நிலம், வீடு, நகை, முதலீடு […]
RCB வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், IPL இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் RCB-யை unfollow செய்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. RCB அணி தனது IPL பயணத்தை கொண்டாடும் வகையில் பெங்களூரில் பெரிய ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் அங்கு: போதுமான பாதுகாப்பு இல்லை, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இல்லை, […]
விஜய் கட்சியுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு கரூரில் தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துப் பேசியுள்ளார். நேற்று கரூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற பிரேமலதா விஜய்காந்த் அங்குள்ள தனியார் ஹோட்டலில் தங்கினார். இன்று காலை கரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் என்பது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக முடிவு செய்யப்பட்ட ஒன்று. ஆனால், அதில் எந்த ஆண்டு என்பதை குறிப்பிடவில்லை. இந்த […]
சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி அருண்ராஜூக்கு தவெகவில் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்ற மூத்த IRS அதிகாரி கே.ஏ.அருண்ராஜ், தமிழக அரசியலில் புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே 22 ஆம் தேதி அவர் விருப்ப ஓய்வு பெற்றதும், இன்று பனையூரில் விஜய்யை நேரில் சந்தித்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் […]
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் ப்ளூம்பெர்க் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், கூகிள் நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். எதிர்காலத்தில் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்று கேட்டபோது, அவர் ஒரு சுவாரஸ்யமான பதிலைச் சொன்னார். அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதராக இருக்கலாம். அல்லது அதை AI வழிநடத்தலாம். அவர் பதிலளித்தார். யார் […]