தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் வைத்துக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். தவெக மகளிரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில், காலை 11 மணியளவில் உதயநிதியை அவரது இல்லத்திலேயே வைத்துப் பிடித்த காவல்துறையினர், உடனடியாக தஞ்சைக்கு அழைத்துச் செல்லப் புறப்பட்டனர். […]
கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் 8 மாவட்டங்களுக்கு அதிதீவிர மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் இடைவிடாது பெய்து வரும் மழையால் ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் பல பகுதிகளில் மழையின் அளவு 100 மில்லி மீட்டரை கடந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில், […]
கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் அருணன் ஆகியோரின் தாயார் தேவகி என்பவர் கடந்த 3ஆம் தேதி காலமானார். அவரது அஸ்தியைக் காவிரி ஆற்றில் கரைப்பதற்காக இருவரும் தங்கள் உறவினர்களுடன் கரூர் அருகே உள்ள நெரூர் காவிரி ஆற்றுப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு அஸ்தியைக் கரைத்த பின்னர், அனைவரும் ஆற்றில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, அவர்களுடன் வந்த உறவினரான சீனிவாசன் (64) என்பவர் ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்று, […]
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக கடந்த ஜூன் 20ம் தேதி கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், நெல்லை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவ்வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதைத் தொடர்ந்து, பிணை ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்தப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நெல்லை மத்திய சிறை என்பது தி.மு.க.வினருக்கு முக்தி தரும் இடம். சிறைச்சாலை என்பது எங்களுக்கு […]
காவிரி நீர் உரிமை மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது செய்ததை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட முடியாமலும், மேகதாது அணை திட்டத்தை தடுக்க இயலாமலும் தவெக அரசு மெத்தனப்போக்குடன் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதனை கண்டித்து தஞ்சையில் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டம், ஒட்டுமொத்த தமிழகத்தின் கொந்தளிப்பை எதிரொலிக்கும் வகையில் அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்போது உரையாற்றிய, […]
நமது இல்லங்களில் பொருட்களை வைக்கும் விதம் மற்றும் அவற்றை பராமரிக்கும் முறையை பொறுத்தே வீட்டை சுற்றி நேர்மறை மற்றும் எதிர்மறை அதிர்வலைகள் உருவாகின்றன. குறிப்பாக, பணத்தையும் விலைமதிப்பற்ற பொருட்களையும் பாதுகாப்பாக வைக்கும் பீரோவை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வாஸ்து மற்றும் ஆன்மீக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், வீட்டில் செல்வம் தங்குவதற்கும் லட்சுமி கடாட்சம் பெருகவதற்கும் பீரோவில் தவிர்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள் குறித்து காண்போம். […]
ஒவ்வொரு மனிதனின் மனதிலும் தனது எதிர்கால வாழ்க்கை எப்படி இருக்கும், என்னென்ன திருப்புமுனைகள் நிகழும் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே இருப்பது உண்டு. ஆனால், தோன்றும் நேரத்திலெல்லாம் ஜாதக கணிப்புகளைத் தேடிச் செல்வதை விட, அதற்கென ஜோதிட சாஸ்திரத்தில் வரையறுக்கப்பட்டுள்ள உரிய தருணங்களில் அணுகுவதே சரியான வழிகாட்டலாக அமையும். எப்போது பார்க்க வேண்டும்? ஜாதகம் என்பது ஒருவரின் வாழ்வியலுக்கான வழிகாட்டி மட்டுமே. வாழ்வின் முக்கியமான தருணங்களான திருமணம், புதிய […]
தற்போதைய காலகட்டத்தில் திருமணத்திற்கு பிறகான குழந்தை பேற்றை தள்ளிப்போடும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக கருவுறுதலில் பல்வேறு சவால்களும் உருவாகி வருகின்றன. தாமதமான திருமணம், சீரற்ற வாழ்வியல் பழக்கவழக்கங்களால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் மற்றும் திட்டமிட்டு கருவுறுதலை தள்ளிப்போடுவது போன்றவை இதன் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. எனினும், ஆரோக்கியமான உணவு முறை, மிதமான உடற்பயிற்சி மற்றும் உடல் எடையை சீராக பராமரிப்பது ஆகியவற்றின் மூலம் […]
உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்வது உடலில் பல்வேறு நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். உடல் பருமன் மற்றும் அதனால் ஏற்படும் சுகாதார சிக்கல்களை தவிர்க்க உடற்பயிற்சி அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்பது பொதுவான பரிந்துரையாக உள்ளது. எனினும், பணிச்சுமை காரணமாக பலருக்கும் காலையில் இதற்கான நேரம் […]
மதுரையில் நடிகை த்ரிஷாவை அரசியலுக்கு வர அழைப்பு விடுத்து ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனம் பெற்றுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. முதல்வர் விஜய்யின் நெருங்கிய தோழியாகவும் அறியப்படுகிறார். சமீப காலமாகவே இவர் அரசியலுக்கு வரப்போவதாக பேச்சுகள் அடிபட்டு வருகின்றன. முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருச்சி கிழக்கு தொகுதியில் த்ரிஷா போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தாத […]

