உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள ஃபதே பூரில் சந்திரிகா தேவி கோயிலுக்கு 50 பேர் கிராம மக்கள் டிராக்டரில் பயணித்தனர். கதம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டர் தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற விழுந்ததில் அனைவரும் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். […]
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் , அம்மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பொறுப்பில் இருந்து அவர் விடுவித்துக் கொண்டார். பின்னர் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நிலை […]
சென்னையில் தனியார் கல்லூரி விடுதியில் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்த பொத்தேரியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியில் பி.டெக் முதல் ஆண்டு படித்து வந்த மாணவர் முகிலு விஸ்வநாதன். இவர் மத்தியபிரதேசத்தில் சொங்காபூர் ரயில்வே நகர் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மகன். மத்திய பிரதேசத்தில் இருந்து வந்து இங்கு தங்கி படித்து வந்த மாணவர் கடந்த […]
பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே தனது மூக்கிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்போவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் ’முகமூடி’ திரைப்படம் மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே . பின்னர் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். முன்னணி கதாநாயகர்களுடன் ஏராளமான தெலுங்கு திரைப்படங்கள் நடித்து அந்த படங்கள் வெற்றியானதை அடுத்து மீண்டும் தமிழில் பீஸ்ட் திரைப்படம் நடித்தார். தெலுங்கில் மகரிஷி, ராதே ஷ்யாம் , ஆச்சார்யா , ஒக்கலைலா […]
இனி செல்போன் எடுத்து பேசும்போது ஹலோ என சொலலாமல் அதற்கு பதில் வந்தே மாதரம் என்றுதான் கூற வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து அழைப்புகளை ஏற்று பதில் கூறும்போது அவர்களிடம் ’ஹலோ ’’ என கூறாமல் ’வந்தே மாதரம் ’’ என கூற வேண்டும். இது அரசு உள்ளாட்சி […]
காதலியைப் பற்றி நண்பன் தவறாக பேசியதால் தகராறு ஏற்பட்டதில் கல்லால் தலையில் அடித்து கொடூரமாகக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கேளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே அடையாளம் தெரியாத உடல் கிடைத்துள்ளது. 22 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் மீட்கப்பட்ட உடலில் சூர்யா, பேட்பாய், பிரதீப் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதை வைத்து போலீசார் […]
தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த பெண்களும் , இலவச பேருந்து பயணத்தை புறக்கணிக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் , ’’ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பண்டிகை காலத்தில் வருமானம் பார்க்க அதிக விலை அறிவித்துள்ளார்கள். வசதியானவர்கள் ஆம்னி பேருந்தில் செல்லட்டும் ஏழை மக்கள் அரசு பேருந்தில் பயணிக்கலாம் என அமைச்சர் கூறுகின்றார். இதை கூறுவதற்கு அவர் ஏன் அமைச்சராக இருக்க வேண்டும். ஒரு […]
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெற்றியை நோக்கி நகர்வதற்கு வந்தியத்தேவனாக நடித்துள்ள கார்த்தி தனது நன்றியை தெரிவித்துள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தான் நடித்தது குறித்து அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.5 […]
ஓசி பேருந்தில் நான் வரமாட்டேன் என நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாட்டி மீது வழக்கு பதிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு எஸ்.பி.வேலுமணி கண்டனம் தெரிவித்துள்ளார். கோவையில் பேருந்தில் பயணம் செய்த பாட்டி ஒருவர் ’’ஓசி பேருந்தில் நான் வர மாட்டேன்’’ இந்தா காசபுடி என பேசிய வீடியோ வைரலானது. இதையடுத்து அமைச்சர் பொன்முடி நான் விளையாட்டாக பேசியதை யாரும் பெரிது படுத்தவேண்டாம் என கூறி வருத்தம் தெரிவித்தார். இந்நிலையில் […]
சல்மான் கானுக்கு திரைப்படத்தில் டூப் போடும் கலைஞர் ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இந்தி திரையுலகில் சல்மான்கானுக்கு டூப் போடும் பிரபல கலைஞர் சாகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 50 வயது நிரம்பிய சாகர் நல்ல உடற்தகுதிவாய்ந்தவர். தினமும் அவர் உடற்பயிற்சிசெய்து தன்னை கட்டுக்கோப்பாக வைத்து வந்திருக்கின்றார். சமீபத்தில் ’பஜ்ரங்கி பைஜான்’ ’டியூப்லைட் ’ தபாங் போன்ற திரைப்படங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் டூப் போட்டுள்ளார். அவர் […]