பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான செலவினங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தற்போதைய காலம் வரையிலான பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு மேற்கொண்ட செலவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளன. அதன்படி, 2021ஆம் ஆண்டில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக சுமார் ரூ.36.11 கோடி செலவிடப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டான 2022இல் இந்த செலவு அதிகரித்து சுமார் ரூ.55.82 கோடியாக […]

சூரியன் அழியும் காலத்தில் பூமியையும் மனித குலத்தையும் காப்பாற்ற முடியுமா என்ற கேள்விக்கு அறிவியல் உலகம் ஒரு புதிய பதிலை முன்வைத்துள்ளது. இன்னும் சில பில்லியன் ஆண்டுகளில் சூரியன் தனது இறுதி நிலையை அடைந்து விரிவடையும் போது, அது புதன் மற்றும் சுக்கிரன் கிரகங்களை விழுங்கி பூமியையும் அழித்துவிடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இந்த பேரழிவில் இருந்து தப்பிக்க கேப்ரியல் ஹாரி என்ற சுயேச்சை ஆராய்ச்சியாளர் ‘ஜர்னல் ஆஃப் தி […]

ஆயுர்வேத மருத்துவத்தில் தேன் வெறும் சுவையான உணவுப்பொருளாக மட்டுமின்றி, பல்வேறு மருத்துவக் குணங்கள் நிறைந்த இயற்கை மருந்தாகவும் போற்றப்படுகிறது. இயற்கைச் சர்க்கரைகளுடன் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், என்சைம்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள தேனைச் சரியாக உட்கொள்வது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், செரிமானத்தை சீராக்கி, சருமம் மற்றும் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். இருப்பினும், தேனை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால் அது ஆரோக்கியத்திற்கு நன்மைகளுக்குப் பதிலாகத் தீங்கையே விளைவிக்கும் என […]

நமக்கு தீங்கு விளைவித்தவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணம், பாதிக்கப்பட்ட பலரின் மனதிலும் எழும் ஒரு இயல்பான உணர்வாகும். இருப்பினும், பிறர் செய்த தீங்கையும் அதனால் ஏற்பட்ட கோபத்தையும் மனதில் சுமந்துகொண்டே இருப்பது நமக்கு எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்குவதற்கு ஒரு அழகான குட்டிக்கதை சுட்டிக்காட்டப்படுகிறது. ஒருமுறை சீடன் ஒருவன் தனது குருவிடம் சென்று, “என்னை ஒருவர் மிகவும் காயப்படுத்திவிட்டார். அவர் செய்த தீமைக்கான […]

முதல்வர் விஜய்க்கும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றனர். முன்னதாக கரூரில் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் விஜய் வழங்கி உத்தரவிட்டார். இருப்பினும், அரசுப் பணிக்காக லட்சக்கணக்கான இளைஞர்கள் காத்திருக்கும் சூழலில், […]

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். மகாராஷ்டிராவில் தமது நிகழ்ச்சிகளை நிறைவு செய்துவிட்டு சென்னை வந்த அவருக்கு, விமானநிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு சென்றார். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடில் வந்து இறங்கிய அவர், பின்னர் கார் வாயிலாக ரமண […]

ரஷ்யா மற்றும் அந்நாட்டிடம் இருந்து எண்ணெய், எரிவாயு போன்ற எரிசக்திப் பொருட்களை கொள்முதல் செய்யும் நாடுகளை இலக்காகக்கொண்டு, அமெரிக்க செனட் சபை புதிய தடைகள் சட்ட மசோதாவிற்கு 86-11 என்ற கணக்கில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீதான போரில் மாஸ்கோவின் பொருளாதார வலிமையை முடக்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கை, ரஷ்யாவிடம் இருந்து பெருமளவில் எரிசக்தியை இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். […]

மதுரை மாவட்டம் புதுராமநாதபுரம் ரோடு கணபதி மில் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார். கீழமாசி வீதியில் உள்ள கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சாந்தா (33) ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சாந்தா வேலை செய்த கடையில், பஞ்சவர்ணம் என்ற பெண்ணும் பணியாற்றியதால், அவரது வீட்டிற்குச் சாந்தா அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, பஞ்சவர்ணத்தின் மகன் சரவண பிரபு (25) என்பவருடன் […]

தமிழகத்தில் உள்ள கோவில்களில் சினிமா பிரபலங்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் புகைப்படம் மற்றும் காணொளி எடுப்பதற்கு தடை விதித்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் வினய் கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கலைத்துறை பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்கள் கோவில் தரிசனத்திற்கு வரும்போது, அவர்கள் வருகை தரும் நேரம் மற்றும் உடன் வருபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை குறைந்தபட்சம் ஒரு நாளுக்கு முன்பாக ஆணையர் அலுவலகத்திற்கு தெரிவிக்க […]

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அன்வர்தீன் சிறையில் நெஞ்சுவலியால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முழுமையான மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே கைதிகள் சிறையில் அடைக்கப்படும் சூழலில், அரசின் நில மோசடியை அம்பலப்படுத்திய வழக்கில் தொடர்புடையவருக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி ஏற்படும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த […]